Vaada Malare |
---|
வாடா மலரே தமிழ் தேனே
வாடா மலரே தமிழ் தேனே
என் வாழ்வின் சுவையே
ஒளி வீசும் புது நிலவே
வாடா மலரே தமிழ் தேனே
ஆறாவமுதே எனதன்பே
ஆறாவமுதே எனதன்பே
என்னை ஆளும் அழகே
தமிழாகும் கடலில் வந்த
ஆறாவமுதே எனதன்பே
தாரணி வணங்கும் மன்னன்
தனிப் பெரும் தேரே
தாரணி வணங்கும் மன்னன்
தனிப் பெரும் தேரே
தரிக்குமோ
என் உயிர் உனைப் பிரிந்தால்
தரிக்குமோ
என் உயிர் உனைப் பிரிந்தால்
வானும் கடலும்
திசை நாலும் மாறினும்
நாம் எந்நாளும் பிரியோம்
வானும் கடலும்
திசை நாலும் மாறினும்
நாம் எந் நாளும் பிரியோம்
காதல் வாழ்வில்
சுடர் வீசும் ஜோதியாய்
காதல் வாழ்வில்
சுடர் வீசும் ஜோதியாய்
காலமெல்லாம் வாழ்ந்திடுவோம்
காலமெல்லாம் வாழ்ந்திடுவோம்
காவியப் புலவரெல்லாம்
களிப்புடன் பாராட்டி
காவியப் புலவரெல்லாம்
களிப்புடன் பாராட்டி
கவிதை பொழியும்
புகழ் நாம் காணுவோம்
கவிதை பொழியும்
புகழ் நாம் காணுவோம்
இருவர் : என்றும் ஆறாவமுதே எனதன்பே
என்னை ஆளும் அழகே
தமிழாகும் கடலில் வந்த
இருவர் : ஆறாவமுதே எனதன்பே