Vaada Thambi |
---|
ஆஆஆஆஆஆஅ
வாடா தம்பி வேலு
என் கதைய கொஞ்சம் கேளு
வாடா தம்பி வேலு
என் கதைய கொஞ்சம் கேளு
பாட்டு ஒன்னு பாட சொல்லி
கொட்டுது நாலு தேளு
கலக்கலா கலர் கலரா
கடல் மீன்கள் இருக்குதடா
கரைக்குத்தான் வந்தா
வெயில் காஞ்சா அது கச்ச கருவாடுடா
கலக்கலா கலர் கலரா
கடல் மீன்கள் இருக்குதடா
பெத்தவங்க பிரிவாலே
பாதி மனம் பரி போச்சு
கிறுக்கு பயன்னு ஊருல
என் பேரு நிலையாச்சு
ஓஒசொத்துமில்ல சொகமும்மில்ல
சொந்தமில்ல பந்தமில்ல
சோதனை எல்லாம் எனக்குத்தான்
சிறு துரும்பா போயாச்சி
போனதெல்லாம் போன பின்னும்
எனக்கு இருப்பது ஒரு உறவு
ஆனா மட்டும் காப்பாத்த
தவிக்குதே இந்த இள மனசு
கடமை இடையிலும்
கண்ணீர் மழையும்
கலந்தது என் உசுரு
கலக்கலா கலர் கலரா
கடல் மீன்கள் இருக்குதடா
கரைக்குத்தான் வந்தா
வெயில் காஞ்சா அது கச்ச கருவாடுடா
கலக்கலா கலர் கலரா
கடல் மீன்கள் இருக்குதடா
வாடா தம்பி வேலு
என் கதைய கொஞ்சம் கேளு
மனசுக்குள்ள எரியுதுடா
ஒதடு மட்டும் சிரிக்குதடா
இருட்டு நடுவே எனக்குத்தான்
புது வெளிச்சம் தெரியுதடா
ஓஒகாலம் இனி மாறும்மடா
காசு பணம் சேரும்மடா
சோகம் என்னும் மேகம்தான்
இனி கலைஞ்சே ஓடுமடா
தோல்வியெல்லாம் துச்சமடா
துணிச்சல் இருக்கு மலை போல
கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல
கிழக்கு வெளுக்கும் தன்னால
நடந்தது பாதி
நடப்பது பாதி
ஜெயிச்சுடுமாடா நீதி
கலக்கலா கலர் கலரா
கடல் மீன்கள் இருக்குதடா
கரைக்குத்தான் வந்தா
வெயில் காஞ்சா அது கச்ச கருவாடுடா
கலக்கலா கலர் கலரா
கடல் மீன்கள் இருக்குதடா
வாடா தம்பி வேலு
என் கதைய கொஞ்சம் கேளு
பாட்டு ஒன்னு பாட சொல்லி
கொட்டுது நாலு தேளு