Vaadamallikari |
---|
வாடாமல்லிகாரி
என் வருங்கால கொலைகாரி
கோடை மழையா மாறி
என்ன நினைச்சாயே மும்மாரி
பொரட்டி போட்ட ஆமைய போல
மனசு கெடக்குதடி
நனைஞ்சு போன எள்ளு செடியா
உசுரு நழுவுதடி
என் உசுரே என் உசுரே
என் மனச பறிக்காதே
மனசே என் மனசே
என் வயச முறிக்காதே
என் உசுரே என் உசுரே
என் மனச மதிக்காதே
உசுரே என் உசுரே
என் உசுர கடிக்காதே
உன்ன ஏன்டா பாத்தேன் நான்
நேத்துதான்டா பூத்தேன் நான்
தாவணிக்குள் மொளைச்சேன் நான்
தாவி குதிச்சேன் நான்
வெட்க காடா ஆனேன் நான்
வெட்கம் கேட்டு போனேன் நான்
கோழி குஞ்சா ஆனேன் நான்
கூவ மறந்தேன் நான்
ஹே தொரட்டி போட்டு
இழுக்குற என்ன
குண்டு கண்ண என்னடி பண்ண
ஐயோ ஐயோ என்ன கொள்ளாதே
வெளைஞ்சு நிக்கும் வெத்தல கொடியா
மென்னு பாக்க இழுக்குற சரியா
கொலைகாரி சொல்லேன்டி
பொய் மட்டும் சொல்லாதே
என் உசுரே என் உசுரே
என் மனச பறிக்காதே
மனசே என் மனசே
என் வயச முறிக்காதே
என் உசுரே என் உசுரே
என் மனச மதிக்காதே
உசுரே என் உசுரே
என் உசுர கடிக்காதே
அடி உசுரேஏஏ
அடி உசுரேஏஏ
காஞ்சு கெடந்த செங்காடு
கன்னம் பட்டு பூத்தாச்சு
நெஞ்சு பாக்க வரியா நீ
ஏழை களவாணி
வீடு முழுக்க உன் வாசம்
வெரட்டி வெரட்டி கதை பேசும்
வெளிய சொன்னா சங்கோஷம்
என்ன சவகாஷம்
ஏ உள்ளுக்குள்ள உன்ன நினைச்சா
உச்சம் தலையில் கொம்பு முளைக்கும்
ஏனோ ஏனோ விடையும் தெரியாதே
ஈர காட்ட உழுவது போல
பொரட்டி போட்ட என்னையும் மெல்ல
தடை சொல்ல முடியாம
தலையாட்டி நின்னேனே
என் உசுரே என் உசுரே
என்ன உசுப்பி கெடுக்காத
மனசே என் மனசே
என்ன அடிச்சு துவைக்காத
வாடாமல்லிகாரி
என் வருங்கால கொலைகாரி
கோடை மழையா மாறி
என்ன நினைச்சாயே மும்மாரி
பொரட்டி போட்ட ஆமைய போல
மனசு கெடக்குதடி
நனைஞ்சு போன எள்ளு செடியா
உசுரு நழுவுதடி
என் உசுரே என் உசுரே
என் மனச பறிக்காதே
மனசே என் மனசே
என் வயச முறிக்காதே
என் உசுரே என் உசுரே
என் மூச்ச நிறுத்தாதே
மனசே என் மனசே
என்ன வாட்டி வறுக்காதே