Vaadumo Oviyam |
---|
வாடுமோஓவியம்
ஆஆ பாடுமோ காவியம்
ஆஆ சந்தோஷம் காணாத உள்ளம்
ஆஆ சங்கீதம் கேட்டாலே துள்ளும்
ஒரு ராகம் பாடு போதும்
அதில் சோகம் யாவும் ஓடும்
இருவர் : நலம் காணலாம் தினம்
வாடுமோ ஓவியம்
ஆஆ பாடுமோ காவியம்
வேரும் வெந்நீரும்
சேர்ந்தால் என்னாகும்
வாடும் சோலை தான்
காலம் செய்கின்ற
கோலம் எல்லாமே
தேவன் லீலை தான்
பாசம் வைத்தாலும்
நேசம் வைத்தாலும்
பாவம் தானா சொல்
கங்கை என்றெண்ணி
கானல் என்றாக
குற்றம் யார் மேல் சொல்
வீணைக்கேது வாழ்வு
மீட்டிடாத போது
ஞானம் இல்லையானால்
கானம் இங்கு ஏது
நிஸ்ஸா கரிஸரி
ஸரி நிஸா தநி பதா
மபா தஸநித
பத மப கம ரிக
நிஸா ரிகம ரிகா மபத
ரிஸா நிதப மகா ரிஸநி
வாடுமோ ஓவியம்
ஆஆ பாடுமோ காவியம்
மாலை முள்ளாக
மன்னன் கல்லாக
ஏங்கும் ஜீவன் நான்
தாரம் இல்லாத
பாரம் நெஞ்சோடு
தாங்கும் ஜீவன் நான்
ஆற்றில் இந்நேரம்
காற்றில் தள்ளாடும்
படகைப் போலே நான்
வாலும் இல்லாத
நூலும் இல்லாத
பட்டம் போலே நான்
நானும் நீயும் இன்று
போகும் பாதை ஒன்று
வாட்டம் நீங்கி வாழும்
வேளை ஒன்று உண்டு
நிஸ்ஸா கரிஸரி
ஸரி நிஸா தநி பதா
மபா தஸநித பத மப கம ரிக
நிஸா ரிகம ரிகா மபத
ரிஸா நிதப மகா ரிஸநி
வாடுமோஓவியம்
ஆஆ பாடுமோ காவியம்
ஆஆ சந்தோஷம் காணாத உள்ளம்
ஆஆ சங்கீதம் கேட்டாலே துள்ளும்
ஒரு ராகம் பாடு போதும்
அதில் சோகம் யாவும் ஓடும்
இருவர் : நலம் காணலாம் தினம்
வாடுமோ ஓவியம்
ஆஆ பாடுமோ காவியம்