Vaama Vaa |
---|
வாம்மா வா சண்டி ராணி
வந்தேனே சின்ன ராணி
வாம்மா வா சண்டி ராணி
வந்தேனே சின்ன ராணி
கேளு உன் வீட்டு வாசலில்
பாட்டு கச்சேரிதான்
போடு என்னோடு போட்டிதான்
போட்டா முகாரிதான்
வாம்மா வா சண்டி ராணி
ஹ வந்தேனே சின்ன ராணி ஹோ
கானம் பாடும் வானம்பாடி
கூடு தேடுது
காலம் தோறும் வாழ்ந்திருக்க
வீடு தேடுது
வாரம் மாதம் வருஷம் என்று
நாட்கள் ஓடுது
நீ வராமல் விழிகள் என்னும்
பூக்கள் வாடுது
பெண் மற்றும்
நேசம் என்பது கைகள் நீட்டுது
நெஞ்சம் ஏனடி வாசல் பூட்டுது
கண்ணில் உள்ள மோகம் நெஞ்சில் உள்ள தாகம்
உன்னை எந்தன் சொந்தம் என்று
சொல்ல வைக்கும்
வாம்மா வா சண்டி ராணி
வந்தாளே சின்ன ராணி
வாம்மா வா சண்டி ராணி
ஆ வந்தாளே சின்ன ராணி
கேளு உன் வீட்டு வாசலில்
பாட்டு கச்சேரிதான்
போடு என்னோடு போட்டிதான்
போட்டா முகாரிதான்
வாம்மா வா ஆ சண்டி ராணி
வந்தாளே ஆ சின்ன ராணி
நாடெல்லாம் கேட்டு கை தட்டும்
நீ பாடும் வாய்ப் பாட்டுத்தான்
ஆனாலும் என் நெஞ்சைத் தட்டும்
அம்மா உன் தாலாட்டுத்தான்
பெண் மற்றும்
ஏம்மா தாயே நியாயமா
பிள்ளை தாய்க்கு பாரமா
உண்மை ஊமை ஆகுமா
தீயில் தங்கம் வேகுமா
பிள்ளை பெற்ற சேதியை
நீ தான்டி தாயே
பொத்திப் பொத்தி இன்னும் மூடாதே
என்னைப் பெற்ற அன்னையே
உன் வாயால் நீயே
ஒத்துக் கொள்ள வைப்பேன் ஓடாதே
வாம்மா வா சண்டி ராணி
வந்தாளே சின்ன ராணி
வாம்மா வா சண்டி ராணி
வந்தாளே சின்ன ராணி
கேளு உன் வீட்டு வாசலில்
பாட்டு கச்சேரிதான்
போடு என்னோடு போட்டிதான்
போட்டா முகாரிதான்
வாம்மா வா ஆ சண்டி ராணி
வந்தாளே ஆ சின்ன ராணி
வாம்மா வா சண்டி ராணி
வந்தாளே சின்ன ராணி ஹோ