Vaan Pole Vannam Kondu

Vaan Pole Vannam Kondu Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே
அஹா வெண்ணிலா மின்னிடும்
கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே
பல விந்தைகள் செய்தவனே

அ ஹா ஹஹ்ஹஹ்ஹா
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே

மண்ணைத் தின்று வளர்ந்தாயே
துள்ளிக்கொண்டு திரிந்தாயே
மண்ணைத் தின்று வளர்ந்தாயே
துள்ளிக்கொண்டு திரிந்தாயே

அன்னையின்றிப் பிறந்தாயே
பெண்களோடு அலைந்தாயே
மோகனங்கள் பாடி வந்து
மோக வலை விரித்தாயே

ஆஆஆஅஆஅ
மோகனங்கள் பாடி வந்து
மோக வலை விரித்தாயே

சேலைகளைத் திருடி
அன்று செய்த லீலை பல கோடி
பொன்னான காவியங்கள்
போற்றிப் பாடும் காதல் மன்னா

வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே

அ ஹா ஹஹ்ஹஹ்ஹா
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே

பெண்களுடை எடுத்தவனே
தங்கக் குடை கொடுத்தவனே
பெண்களுடை எடுத்தவனே
தங்கக் குடை கொடுத்தவனே


ராச லீலை புரிந்தவனே
ராஜ வேலை தெரிந்தவனே
கீதையென்னும் சாரம் சொல்லி
கீர்த்தியினை வளர்த்தாயே

ஆஅஆஆஆஆ
கீதையென்னும் சாரம் சொல்லி
கீர்த்தியினை வளர்த்தாயே

கவிகள் உன்னை வடிக்க
காலமெல்லாம் நிலைத்தாயே
வானில் உந்தன் கானமெல்லாம்
இன்றும் என்றும் வாழும் கண்ணா
சேலைகளைத் திருடி – அன்று

வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே

அ ஹா ஹஹ்ஹஹ்ஹா
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே

அஹா வெண்ணிலா மின்னிடும்
கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே
ம்ம்ம்
பல விந்தைகள் செய்தவனே

அஹா வெண்ணிலா மின்னிடும்
கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே
ம்ம்ம்
பல விந்தைகள் செய்தவனே

அ ஹா ஹஹ்ஹஹ்ஹா
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே