Vaanam Nilavai |
---|
வானம் நிலவை மறந்தது
மறந்தது
அது மலராய் பூமியில் பிறந்தது
பிறந்தது
மலரைத் தோட்டம் மறந்தது
அது மங்கை வடிவில் வளர்ந்தது
மங்கை வடிவில் வளர்ந்தது
வளர்ந்தது
ஒரு மன்னவன் வடிவை கண்டது கண்டது
கண்கள் இரண்டும் கலந்தது
அது காலை பார்த்து நடந்தது
மங்கை வடிவில் வளர்ந்தது
வளர்ந்தது
ஒரு மன்னவன் வடிவை கண்டது கண்டது
காலை பார்த்து நடந்தது
பெரும் கருணை மழையை பொழிந்தது
பேசும் கண்ணை திறந்தது
அதில் பெண்மை முழுதும் வழிந்தது
பெண்மை முழுதும் வழிந்தது
அது பேசும் வேகம் தணிந்தது
மென்மை உடலில் நிறைந்தது
மனம் மேகம் போலே அலைந்தது
வானம் நிலவை மறந்தது
மறந்தது
அது மலராய் பூமியில் பிறந்தது
பிறந்தது
மேகம் போலே அலைந்தது
பெரும் வெள்ளமாகி விழுந்தது
நதியாய் உலகில் நடந்தது
இந்த நாயகன் கடலில் கலந்தது
நாயகன் கடலில் கலந்தது
இனி நாளும் அவனே என்றது
காயாய் இருந்து கனிந்தது
உயர் காதல் கதவும் திறந்தது
வானம் நிலவை மறந்தது
மறந்தது
அது மலராய் பூமியில் பிறந்தது
பிறந்தது