Vaanam Pesuma Duet |
---|
பாடலாசிரியர் : புலமைபித்தன்
வானம் பேசுமா அது சாட்சி கூறுமா நெஞ்சில் உள்ள எண்ணங்கள் கொஞ்சம் இன்று சொல்லுங்கள் ஓஒகண்களே
கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே உன்னைத் தேடி நான் வந்தேன் உந்தன் எண்ணம் நான் கண்டேன் ஓஒநெஞ்சமே
ரரரரார பூவேஹஹா கமான் பூவே வாசம் வீசு தேனை அள்ளி பூசு காற்றே காற்றே வீசு மெல்ல காதல் கீதம் சொல்ல
சொல்ல துடிக்கும் அதை சொல்லில் மறைக்கும் சொல்லி மறைக்கும் கதை கண்ணில் தெரியும் சொல்ல துடிக்கும் அதை சொல்லில் மறைக்கும் சொல்லி மறைக்கும் கதை கண்ணில் தெரியும் நெஞ்சில் ஓடும் நாணம் மஞ்சள் பூசும் வானம்
வானம் பேசுமா அது சாட்சி கூறுமா நெஞ்சில் உள்ள எண்ணங்கள் கொஞ்சம் இன்று சொல்லுங்கள் ஓஒகண்களே
வா வா ம்ம் வா வா தென்றல் காற்றே வாடும் என்னைப் பார்த்தே போ போ ஹ்ம்ம் ம்ம் போ போ தூது கொஞ்சம் ஏங்கும் காதல் நெஞ்சம்
நெஞ்சம் இனிக்க அது எங்கும் பறக்க எங்கும் பறந்து இன்ப எல்லை கடந்து நெஞ்சம் இனிக்க அது எங்கும் பறக்க எங்கும் பறந்து இன்ப எல்லை கடந்து எங்கோ போகும் கால்கள் பன்னீர் வார்க்கும் கண்கள்
கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே உன்னைத் தேடி நான் வந்தேன் உந்தன் எண்ணம் நான் கண்டேன் ஓஒநெஞ்சமே
வானம் பேசுமா அது சாட்சி கூறுமா நெஞ்சில் உள்ள எண்ணங்கள் கொஞ்சம் இன்று சொல்லுங்கள் ஓஒகண்களே