Vaanam Poo Sindhattum |
---|
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பூரணி
பாடலாசிரியர் : கங்கை அமரன்
வானம் பூ சிந்தட்டும் என்றும் வாழ்வே பொன்னாகட்டும் வானம் பூ சிந்தட்டும் என்றும் வாழ்வே பொன்னாகட்டும்
இளம் தேவதைகள் இரு தேரில் வந்து வாழ்த்தி புகழ் பாடட்டும்
வானம் பூ சிந்தட்டும் என்றும் வாழ்வே பொன்னாகட்டும்
பாசம் அன்பென்னும் பாமாலை சூட்டி பாடல் நான் பாடுவேன் நாளும் என் கண்ணன் நன்றாக வாழ நானே வழி காட்டுவேன்
பொன்மணி வைரம் முத்தாரம் அன்போடு தோளினில் நான் சூட்டுவேன்
வரும் காலத்திலே ஒரு ராஜன் என இவன் வாழும் நிலை காண்கின்றேன்
வானம் பூ சிந்தட்டும் என்றும் வாழ்வே பொன்னாகட்டும்
உன்னை உன் அன்னை தாலாட்டும் பாடல் எங்கோ கேட்கின்றது ஆஆஆஆ பிள்ளை உன் அன்பில் உண்டான பாசம் பாட்டில் புரிகின்றது
இன்றவள் இல்லை என் பிள்ளை உன்னோடு என் மனம் அழுகின்றது
அவள் பொன் இதயம் என் கண்மணியை என்றும் காக்கும் காவல் தரும் கமான் கிளாப்
வானம் பூ சிந்தட்டும் என்றும் வாழ்வே பொன்னாகட்டும்
இளம் தேவதைகள் இரு தேரில் வந்து வாழ்த்தி புகழ் பாடட்டும்