Vaanam Thodatha Megam |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
வானம் தொடாத மேகம் தரையில் இறங்கும்
உந்தன் அறையில் உறங்கும்
வானம் தொடாத மேகம் தரையில் இறங்கும்
உந்தன் அறையில் உறங்கும்
பாதை மாறி வா இந்த பாதை கூடவா
காலந்தோறும்தான் உனக்கென நான்
வானம் தொடாத மேகம் தரையில் இறங்கும்
உந்தன் அறையில் உறங்கும்
தரையில் இறங்கும்
உந்தன் அறையில் உறங்கும்
நீயில்லாத நாள் வரை நீரில்லாத தாமரை
வாடி வாடி நின்றது வண்ணமேனி வெந்தது
பார்வை உன்னை பார்த்தது பாசம் ஒன்று பூத்தது
வேனிற்காலம் வந்தது வேறு என்ன சொல்வது
இலக்கியம் நான் கண்ட இலக்கணம் நீயென்று
உணர்த்திடும் நாள் இன்று உன்னையன்றி யாருண்டு
கைக்கூடாது மெய் சேராது கண் தூங்காது வா
வானம் தொடாத மேகம் தரையில் இறங்கும்
உந்தன் அறையில் உறங்கும்
தரையில் இறங்கும்
உந்தன் அறையில் உறங்கும்
கண்கள் எங்கு போகுமோ கால்கள் அங்கு போவதோ
கேள்வி ஏதும் இல்லையோ நீயும் சின்ன பிள்ளையோ
நாலு பேர்கள் பார்வையில் நாளும் ஆடும் பூங்கொடி
தென்றல் தீண்ட ஏங்குது தீயின் மீது தூங்குது
தனி வழி நீ செல்ல விடுபவள் நானல்ல
தனித்தனி பேர் சொல்ல நீயும் நானும் வேறல்ல
என் கண்ணோடும் என் நெஞ்சோடும்
உன் சங்கீதம் தான்
வானம் தொடாத மேகம் தரையில் இறங்கும்
உந்தன் அறையில் உறங்கும்
பாதை மாறி வா இந்த பாதை கூட வா
காலந்தோறும்தான் உனக்கென நான்
வானம் தொடாத மேகம் தரையில் இறங்கும்
உந்தன் அறையில் உறங்கும்
தரையில் இறங்கும்
உந்தன் அறையில் உறங்கும்