Vaanathilirunthu |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
வானத்தில் இருந்து குதிச்சு வந்தேனா
பூமிக்குள் இருந்து வெடிச்சு வந்தேனா
வானத்தில் இருந்து குதிச்சு வந்தேனா
பூமிக்குள் இருந்து வெடிச்சு வந்தேனா
வானத்தில் இருந்து குதிச்சு வந்தேனா
பூமிக்குள் இருந்து வெடிச்சு வந்தேனா
அப்பன் இன்றி அம்மை இன்றி வந்தவனா
ஆண்டவனை தந்தை என்று கொண்டவனா
சுற்றுகின்ற பூமி என்னை நாதியற்ற பிள்ளை என்று
தத்தெடுத்துக் கொண்ட மகனா
நான் மண்ணோட மகனா விண்ணோட மகனா
தன்னால பொறந்தேனா
என்னோட உலகில் அம்மா என்றெனக்கு
யாரேனும் கிடையாதா
வானத்தில் இருந்து குதிச்சு வந்தேனா
பூமிக்குள் இருந்து வெடிச்சு வந்தேனா
எங்கோ ஒரு மூலையிலே
என்னப் பெத்த தாய் இருக்கா
அம்மா உன் நெஞ்சினிலே
என்னப் பெத்த நினைப்பிருக்கா
அம்மா உந்தன் மடியில்
சாய்ந்து அழுதால் கொஞ்சம் நிம்மதி
என்னை மறந்த தாயை
நானும் மறந்தால் என்ன என் கதி
தொப்புள் கொடி வெட்டிய போதே
உறவை வெட்டி விட்டாயா
தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டே
துயரில் மிதக்க வைத்தாயா
எங்கிருக்கே எங்கிருக்கே
நல்ல பதில் சொல்லம்மா
வானத்தில் இருந்து குதிச்சு வந்தேனா
பூமிக்குள் இருந்து வெடிச்சு வந்தேனா
உலகில் நானும் படித்ததெல்லாம்
ஒன்றும் அற்ற படிப்பல்லவா
வேலை தேடும் ஊருக்குள்ளே
தாயைத் தேடும் மகனல்லவா
தாயின் விரலைப் பிடித்தே
நடக்கும் மகனைப் பார்க்கும் போதிலே
தனியாய் நானும் நடந்தேன்
எந்தன் தாயின் எண்ணம் நெஞ்சிலே
பெற்றெடுத்த தாயே தாயே
எரியுதடி பாசத் தீயே
திரையை விலக்கி வந்திடுவாயா
அன்பு மழை பொழிந்துடுவாயா
எங்கிருக்கே எங்கிருக்கே
நல்ல பதில் சொல்லம்மா
வானத்தில் இருந்து குதிச்சு வந்தேனா
பூமிக்குள் இருந்து வெடிச்சு வந்தேனா
வானத்தில் இருந்து குதிச்சு வந்தேனா
பூமிக்குள் இருந்து வெடிச்சு வந்தேனா
அப்பன் இன்றி அம்மை இன்றி வந்தவனா
ஆண்டவனை தந்தை என்று கொண்டவனா
சுற்றுகின்ற பூமி என்னை நாதியற்ற பிள்ளை என்று
தத்தெடுத்துக் கொண்ட மகனா
நான் மண்ணோட மகனா விண்ணோட மகனா
தன்னால பொறந்தேனா
என்னோட உலகில் அம்மா என்றெனக்கு
யாரேனும் கிடையாதா
வானத்தில் இருந்து குதிச்சு வந்தேனா
பூமிக்குள் இருந்து வெடிச்சு வந்தேனா
வானத்தில் இருந்து குதிச்சு வந்தேனா
பூமிக்குள் இருந்து வெடிச்சு வந்தேனா