Vaanathu Poongili |
---|
வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
மண்ணில் வீழ்ந்தாளம்மா
என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா
என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா
வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
மண்ணில் வீழ்ந்தாளம்மா
என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா
என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா
காதல் நம்பிக்கை கனவாக ஆனால்
கடவுள் நம்பிக்கை என்னாவதோ
வேதம் சொல்வோனே பகையாகிப் போனால்
யாரை நம்பித்தான் பெண் வாழ்வதோ
ஒருவனின் காலடி சுகமென்று நம்பி
சென்றேன் நிழல் போலவே
ராமன் என உருகி சொன்னான்
ராவணனாய் மாறி விட்டான்
வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
நாளை வாழ்வாளம்மா
காலம் மாறிடக் காண்பாளம்மா
காலம் மாறிடக் காண்பாளம்மா
நாளைப் பொழுதென்றும் நலமாகுமென்று
நம்பி வாழ்ந்தால்தான் பெண் வாழலாம்
தோளில் அழகாக மணமாலை சூடும்
சொர்க்கம் ஒருவேளை நீ காணலாம்
உலகத்து வாழ்க்கையில் நடக்காததென்ன
தோழி கலங்காதிரு
ஒரு பொழுது அவர்க்கு வந்தால்
மறுபொழுது உனக்கு வரும்
வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
நாளை வாழ்வாளம்மா
காலம் மாறிடக் காண்பாளம்மா
காலம் மாறிடக் காண்பாளம்மா
வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
நாளை வாழ்வாளம்மா
காலம் மாறிடக் காண்பாளம்மா