Vaanathu Poongili

Vaanathu Poongili Song Lyrics In English


வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
மண்ணில் வீழ்ந்தாளம்மா
என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா
என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா

வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
மண்ணில் வீழ்ந்தாளம்மா
என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா
என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா

காதல் நம்பிக்கை கனவாக ஆனால்
கடவுள் நம்பிக்கை என்னாவதோ
வேதம் சொல்வோனே பகையாகிப் போனால்
யாரை நம்பித்தான் பெண் வாழ்வதோ
ஒருவனின் காலடி சுகமென்று நம்பி
சென்றேன் நிழல் போலவே
ராமன் என உருகி சொன்னான்
ராவணனாய் மாறி விட்டான்

வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
நாளை வாழ்வாளம்மா
காலம் மாறிடக் காண்பாளம்மா
காலம் மாறிடக் காண்பாளம்மா


நாளைப் பொழுதென்றும் நலமாகுமென்று
நம்பி வாழ்ந்தால்தான் பெண் வாழலாம்
தோளில் அழகாக மணமாலை சூடும்
சொர்க்கம் ஒருவேளை நீ காணலாம்
உலகத்து வாழ்க்கையில் நடக்காததென்ன
தோழி கலங்காதிரு
ஒரு பொழுது அவர்க்கு வந்தால்
மறுபொழுது உனக்கு வரும்

வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
நாளை வாழ்வாளம்மா
காலம் மாறிடக் காண்பாளம்மா
காலம் மாறிடக் காண்பாளம்மா

வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
நாளை வாழ்வாளம்மா
காலம் மாறிடக் காண்பாளம்மா