Vaanavillae

Vaanavillae Song Lyrics In English


வானவில்லே உன்னை வரைந்தது யார்
மேகங்களே வண்ணம் கொடுத்தது யார்
குயிலுக்கு கானங்கள் தந்தது யார்
காலையில் பனித்துளி விதைத்தது யார்
பறவைக்கு சிறகினை கொடுத்தது யார்
மலருக்குள் வாசத்தை வைத்தது யார்

வானவில்லே உன்னை வரைந்தது யார்
மேகங்களே வண்ணம் கொடுத்தது யார்

தங்க நகை நூறு மின்னலென தோன்றும்
அணிந்திட முடியாது
தாளமிட்டு அலைகள் நடனங்கள் புரியும்
பாதங்கள் தெரியாது

நட்சத்திரம் கோடி புள்ளி வைத்து காட்டும்
கோலமிட முடியாது
நம்மை கண்டு சிரிக்கும் பூக்களின் ஒளியை
கேட்டிட முடியாது

மலர்கூட்டம் கண்டு உறவாடும் வண்டு
மழை மேகம் கண்டு மயிலாடும் நின்று
இது கனவா புது நினைவாபதில் சொல்

வானவில்லே உன்னை வரைந்தது யார்
மேகங்களே வண்ணம் கொடுத்தது யார்


தொட்டு தொட்டு பேசி வட்டம் இடும் தென்றலை
கட்டிவிட முடியாது
தூது வந்த தென்றல் மலர் இடம் பேசும்
வார்த்தைகள் புரியாது

கட்டி கட்டி பிடிக்கும் சிட்டு சிட்டு குருவிகள்
காதலை மறைக்காது
காற்றினில் மூங்கில் கானங்கள் இசைக்கும்
ராகங்கள் தெரியாது

இளங்காலை காற்று வளம் வந்த பொது
இறங்காது உள்ளம் எது என்று கூறு
இது கனவா புது நினைவா பதில் சொல்

வானவில்லே உன்னை வரைந்தது யார்
மேகங்களே வண்ணம் கொடுத்தது யார்
குயிலுக்கு கானங்கள் தந்தது யார்
காலையில் பனித்துளி விதைத்தது யார்
பறவைக்கு சிறகினை கொடுத்தது யார்
மலருக்குள் வாசத்தை வைத்தது யார்

வானவில்லே உன்னை வரைந்தது யார்
மேகங்களே வண்ணம் கொடுத்தது யார்