Vaanil Vaazhum Dhevadhai |
---|
வானில் வாழும் தேவதை
என் நேரில் வந்தாளோ
வானில் வாழும் தேவதை
என் நேரில் வந்தாளோ
வானம் பாடி கானம் பாடி
காதல் சுவையை தந்தாளோ
வானில் வாழும் தேவதை
என் நேரில் வந்தாளோ
ஈர விழியின் ஓர அசைவில்
இன்பம் ஒரு கோடி
ஈர விழியின் ஓர அசைவில்
இன்பம் ஒரு கோடி
அவள் மேனி நெளிவில் சுழலும் நதியின்
அலைகள் கவி பாடி ஹா
இசைக்கும் கீதம் உதய ராகம்
இரவில் உருவாகும்
இசைக்கும் கீதம் உதய ராகம்
இரவில் உருவாகும்
உன் அசைவில் தோன்றும் புதிய தாளம்
என்னுள் சதிராடும்
நான் தொட்டதும்போதுமோ
என் ஆசைகள்நிறைவேறுமா
வானில் வாழும் தேவதை
என் நேரில் வந்தாளோ
இளமை இதழின் இனிய மதுவை
பருக வரும் வண்டு
இளமை இதழின் இனிய மதுவை
பருக வரும் வண்டு
அதன் வளமை கண்டு மயங்கி நின்று
மறந்த கதை உண்டு
கடலின் நடுவில் தாகம் வந்தால்
தீர வழி ஏது
கடலின் நடுவில் தாகம் வந்தால்
தீர வழி ஏது
இந்த உடலின் மீது மோகம் பிறந்தால்
மீள வழி ஏது
நீ தொட்டதும்போதுமோ
என் ஆசைகள்நிறைவேறுமா
வானில் வாழும் தேவன் எந்தன்
நேரில் வந்தானோ
வானம் பாடி கானம் பாடி
காதல் சுவையை தந்தாளோ
வானில் வாழும் தேவதை
எந்தன்நேரில் வந்தாளோ