Vaanuyarntha Solaiyile

Vaanuyarntha Solaiyile Song Lyrics In English




வானுயர்ந்த
சோலையிலே நீ நடந்த
பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்
நாவறண்டு பாடுகின்றேன்

வானுயர்ந்த
சோலையிலே

வாழ்வான
வாழ்வெனக்கு வந்ததென்று
நானிருந்தேன் பாழான
நாளிதென்று பார்த்தவர்கள்
கூறவில்லை

தேனாகப் பேசியதும்
சிரித்து விளையாடியதும்
வீணாகப் போகும் என்று
யாரேனும் நினைக்கவில்லை

வானுயர்ந்த
சோலையிலே நீ நடந்த
பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்
நாவறண்டு பாடுகின்றேன்

வானுயர்ந்த
சோலையிலே




ஆற்றங்கரை
ஓரத்திலே யாருமற்ற
நேரத்திலே வீற்றிருந்த
மணற்பரப்பு வேதனையைத்
தூண்டுதடி

பூத்திருந்த
மலரெடுத்து பூங்குழலில்
சூடிவைத்து
பார்த்திருந்த கோலமெல்லாம்
பழங்கதை ஆனதடி

வானுயர்ந்த
சோலையிலே நீ நடந்த
பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்
நாவறண்டு பாடுகின்றேன்

வானுயர்ந்த
சோலையிலே