Vaaranamayiram

Vaaranamayiram Song Lyrics In English


வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்துஊ
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றுஊஊ
எதிர் பூரண பொற்குடம் வைத்துப்
புறமெங்கும் தோரணம் நாட்டக்
கனாக் கண்டேன் தோழி நான்

காரணம் என்னவென்று கேளடி தோழி
அந்த கண்ணன் என்னிடம் சொன்ன
கவிதைகள் கோடி
காரணம் என்னவென்று கேளடி தோழி

நாரணன் நம்பியின் கோகுலம் தேடி
கனவில் நடந்ததெல்லாம் சொல்லி
பதில் கொண்டு வாடி
காரணம் என்னவென்று கேளடி தோழி

கண்ணன் என்னும் கள்வன் கண் வழிச்சென்று
கன்னி என் நெஞ்சினில் திருப்பள்ளி கொண்டான்
கண்ணன் என்னும் கள்வன் கண் வழிச்சென்று
கன்னி என் நெஞ்சினில் திருப்பள்ளி கொண்டான்
மன்னனை உள்வைத்து கதவினை அடைத்தேன்
மன்னனை உள்வைத்து கதவினை அடைத்தேன்
இந்த மாயத்தை
அவன் செய்த ஜாலத்தை நீ சென்று

காரணம் என்னவென்று கேளடி தோழி


பிருந்தாவனத்தில் பல கோபியர் உண்டு

ஆபிருந்தாவனத்தில் பல கோபியர் உண்டு
என் திருமால் தளத்தில் இரு தேவியர் உண்டு
பிருந்தாவனத்தில் பல கோபியர் உண்டு
என் திருமால் தளத்தில் இரு தேவியர் உண்டு
இருந்தும் அவன் என்னை அடைந்தது என்ன
இருந்தும் அவன் என்னை அடைந்தது என்ன
அவன் எண்ணத்தை
அவன் தந்த இன்பத்தை நீ சென்று

காரணம் என்னவென்று கேளடி தோழி
அந்த கண்ணன் என்னிடம் சொன்ன
கவிதைகள் கோடி
காரணம் என்னவென்று கேளடி தோழி