Vaaranamayiram |
---|
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்துஊ
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றுஊஊ
எதிர் பூரண பொற்குடம் வைத்துப்
புறமெங்கும் தோரணம் நாட்டக்
கனாக் கண்டேன் தோழி நான்
காரணம் என்னவென்று கேளடி தோழி
அந்த கண்ணன் என்னிடம் சொன்ன
கவிதைகள் கோடி
காரணம் என்னவென்று கேளடி தோழி
நாரணன் நம்பியின் கோகுலம் தேடி
கனவில் நடந்ததெல்லாம் சொல்லி
பதில் கொண்டு வாடி
காரணம் என்னவென்று கேளடி தோழி
கண்ணன் என்னும் கள்வன் கண் வழிச்சென்று
கன்னி என் நெஞ்சினில் திருப்பள்ளி கொண்டான்
கண்ணன் என்னும் கள்வன் கண் வழிச்சென்று
கன்னி என் நெஞ்சினில் திருப்பள்ளி கொண்டான்
மன்னனை உள்வைத்து கதவினை அடைத்தேன்
மன்னனை உள்வைத்து கதவினை அடைத்தேன்
இந்த மாயத்தை
அவன் செய்த ஜாலத்தை நீ சென்று
காரணம் என்னவென்று கேளடி தோழி
பிருந்தாவனத்தில் பல கோபியர் உண்டு
ஆபிருந்தாவனத்தில் பல கோபியர் உண்டு
என் திருமால் தளத்தில் இரு தேவியர் உண்டு
பிருந்தாவனத்தில் பல கோபியர் உண்டு
என் திருமால் தளத்தில் இரு தேவியர் உண்டு
இருந்தும் அவன் என்னை அடைந்தது என்ன
இருந்தும் அவன் என்னை அடைந்தது என்ன
அவன் எண்ணத்தை
அவன் தந்த இன்பத்தை நீ சென்று
காரணம் என்னவென்று கேளடி தோழி
அந்த கண்ணன் என்னிடம் சொன்ன
கவிதைகள் கோடி
காரணம் என்னவென்று கேளடி தோழி