Vaarthai Thavari Vittai |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
வார்த்தை தவறி விட்டாய்
கண்ணம்மா மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா
கண்கள் கலங்குதடி
பறந்ததேன் மறந்ததேன்
எனது உயிரை
படித்ததேன் முடித்ததேன்
உனது கதையை
எரியுதே உலகமே சோக நெருப்பில்
வார்த்தை தவறி விட்டாய்
கண்ணம்மா மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா
கண்கள் கலங்குதடி
நீ போன பாதை
எதுவென்று சொல்லு
நானும் உன் பின்னே அங்கே வர
இப்போதும் கூட எதுவென்று சொல்லு
உன் வீடு தேடி நானும் வர
தேர் வரும் நாள் வரும்
என்று நினைத்தேனே
தீ உனை தீண்டவோ
திரும்பி நடந்தேனே
பூமியின் தேவதை
புழுதி மண் மூடலாமோ
வார்த்தை தவறி விட்டாய்
கண்ணம்மா மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய்
கண்ணம்மா கண்கள் கலங்குதடி