Vaazhavaitha

Vaazhavaitha Song Lyrics In English


வாழவைத்த தெய்வமே
கண்ணா கண்ணா
காலம் ஒன்று சேர்ந்ததே
உன்னால் என் கண்ணா

வாழவைத்த தெய்வமே
கண்ணா கண்ணா
காலம் ஒன்று சேர்ந்ததே
உன்னால் என் கண்ணா

நீ இன்றி நான் இல்லை
நேசம் தந்தாயே
நாம் என்றும் ஒன்றாக
வாழும் இன்பம் தந்தாயே

வாழவைத்த தெய்வமே
கண்ணா கண்ணா
காலம் ஒன்று சேர்ந்ததே
உன்னால் என் கண்ணா

மனம் என்னும்
கோவில் இங்கு
அனுதினம் பூஜை தான்
உறவென்னும் பூக்கள் கட்டி
தருவதென் வேலைதான்
கனவிலும் உன் அருகே
சேர்ந்திருப்பேன்

காத்திருந்த காலங்கள்
சேர்ந்து வந்த நேரத்தில்
மகிழ்வோமே
தேடித் தேடி கண்டு கொண்ட
தாயும் நீயம்மா
ஆடிப் பாட ஆசை கொண்ட
சேயைப் பாரம்மா

வாழவைத்த தெய்வமே
கண்ணா கண்ணா
காலம் ஒன்று சேர்ந்ததே
உன்னால் என் கண்ணா


வருகிற காலம் எல்லாம்
நமக்கு இனி சொர்க்கமே
காண்கிற காட்சி எல்லாம்
கனிந்திடும் சோலையே
இருவரும் ஒன்றெனவே
சேர்த்து வைத்தாய்

ஏற்றி வைத்த தீபங்கள்
வாழ்த்துகின்ற தெய்வங்கள்
வளர்வோமே
தாயும் உண்டு தந்தை உண்டு
எந்தன் வாழ்விலே
ஆடிப் பாடும் இன்பம் என்றும்
எந்தன் வீட்டிலே

வாழவைத்த தெய்வமே
கண்ணா கண்ணா
காலம் ஒன்று சேர்ந்ததே
உன்னால் என் கண்ணா

நீ இன்றி நான் இல்லை
நேசம் தந்தாயே
நாம் என்றும் ஒன்றாக
வாழும் இன்பம் தந்தாயே

ஆண் மற்றும்
லாலால லாலா லல லாலா
லாலால லாலா லல லாலா