Vaazhga Engal

Vaazhga Engal Song Lyrics In English


வாழ்க எங்கள் பொன்னாடு
வண்ணத் தமிழ் நன்னாடு
வாழ்க என்றே எந்நாளும் அன்போடு
வளரும் பண்போடு மானங் காக்கும் நம் நாடு

வாழ்க எங்கள் பொன்னாடு
வண்ணத் தமிழ் நன்னாடு
வாழ்க என்றே எந்நாளும் அன்போடு
வளரும் பண்போடு மானங் காக்கும் நம் நாடு

புலவர் வாழும் நாடு
நற்புகழ் மணக்கும் நாடு

புலவர் வாழும் நாடு
நற்புகழ் மணக்கும் நாடு
செந்தேன் மணக்கும் காவியங்கள்
சிறந்து நிற்கும் நாடு
செந்தேன் மணக்கும் காவியங்கள்
சிறந்து நிற்கும் நாடு

உயர் வீரர் தமிழ் மாந்தர் இதை
ஆண்டனர் மூவேந்தர்
ஆஆஆஆஆஆ
வீரர் தமிழ் மாந்தர் இதை
ஆண்டனர் மூவேந்தர்
மாறாத சீரோடு நேரான பண்போடு

வாழ்க எங்கள் பொன்னாடு
வண்ணத் தமிழ் நன்னாடு
வாழ்க என்றே எந்நாளும் அன்போடு
வளரும் பண்போடு மானங் காக்கும் நம் நாடு

தேசிங்கு ராஜமகன் வந்துதித்த வேளையிலே
செல்வமே நீயும் பிறந்தாய் ஆஆஆ
உங்கள் தந்தையர்கள் இரு பேரும்
ஒன்றுபட்டு வாழ்வது போல் ஆஆஆ
ஈருடலும் ஒருயிராய் இணை பிரியாதிருப்பீரேஹேஹே

தேசமெங்கும் கூடும் மக்கள்
போற்றும் செல்வந்தான்
தேசமெங்கும் கூடும் மக்கள்
போற்றும் செல்வந்தான்
எந்நாளும் நேசம் வாழும் வண்ணம்
சேர்க்கும் இன்பந்தான்
எந்நாளும் நேசம் வாழும் வண்ணம்
சேர்க்கும் இன்பந்தான்
எங்கள் தீரன் அகமத்கான்
பெற்ற செல்வம் மகமத்கான்
எங்கள் தீரன் அகமத்கான்
பெற்ற செல்வம் மகமத்கான்
தேசமெங்கும் கூடு மக்கள்
போற்றும் செல்வந்தான்

வான் முகில்கள் யாவும்
உன் வண்ண முகம் நாடும்
வான் முகில்கள் யாவும்
உன் வண்ண முகம் நாடும்
கலை மான் மயங்கும் உன்னழகை
சிரம் வணங்கிப் பாடும்
கலை மான் மயங்கும் உன்னழகை
சிரம் வணங்கிப் பாடும்


கண் பார்த்திருந்தால் போதும்
எம் கவலை பறந்தோடும்
ஆஆஆஆஆஆஆ
பார்த்திருந்தால் போதும் எம் கவலை பறந்தோடும்
கண்ணாலே விண்ணாளும் கண்ணாளா உன்னாலே

வாழ்க எங்கள் பொன்னாடு
வண்ணத் தமிழ் நன்னாடு
வாழ்க என்றே எந்நாளும் அன்போடு
வளரும் பண்போடு மானங் காக்கும் நம் நாடு

ஆஆஆஆஆ
முன்னவனே முதலவனே
முடிவில்லா ஆண்டவனே ஏ ஏ
தன்னந் தனியவனே தாய் தந்தை இல்லாதவனே
எங்கள் திருமகனை என்றென்றும் காத்தருள்வாய்
லாயிலாஹ இல்லல்லாஹு முகம்மது ரசூலுல்லாஹி

ஜாதி மத பேதம்
வீண் சஞ்சலங்கள் ஏதும்

ஜாதி மத பேதம்
வீண் சஞ்சலங்கள் ஏதும்
இங்கில்லா வண்ணம் வாழ்வோம்
இந்நாட்டிலுள்ளோர் யாரும்
இங்கில்லா வண்ணம் வாழ்வோம்
இந்நாட்டிலுள்ளோர் யாரும்

சம நீதிமுறை செய்வோம்
முன்னேற்ற வழி செல்வோம்
ஆஆஆஆஆஆ
நீதிமுறை செய்வோம் முன்னேற்ற வழி செல்வோம்
எல்லோரும் ஒன்றாகும் நல்லோர்கள் சொல்லாலே

வாழ்க எங்கள் பொன்னாடு
வண்ணத் தமிழ் நன்னாடு
வாழ்க என்றே எந்நாளும் அன்போடு
வளரும் பண்போடு மானங் காக்கும் நம் நாடு