Vaazhkayin Paathayil

Vaazhkayin Paathayil Song Lyrics In English


வாழ்க்கையின் பாதை
எங்கோ போகும்
வாசலில் இதயம் யாரை தேடும்
காணும் விழியில் காட்சிகள் இல்லை
கண்டால் எதுவும் கைகளில் இல்லை

காலம் வரும்
ஒரு நேரம் வாரும்
கதை எல்லாம் இங்கே மாறும்
கனவில் வரும்
சில சோகங்களில்
புது கதையை வாழ்க்கை கூறும்

வாழ்க்கையின் பாதை
எங்கோ போகும்
வாசலில் இதயம் யாரை தேடும்

ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ

மழலையில் உறவு
வளர்ந்ததும் பிரிவு
மனிதனின் வாழ்வில் சகஜமடா
உறவில் பிரிவும் உருவாகும்
ஓ ஹோ பிரிவில் உறவும் உண்டாகும்

இரவினை தொடர்ந்து
பகல் வரும் அதுதான்
இயற்க்கை உனக்கு தெரியாதா
மலர்கள் செடியில் உதிர்கிறது
ஓ ஹோ மறுபடி மீண்டும் மலர்கிறது

ஓ மனிதாஓ ஹோ
நாற்றினை பிடுங்கி நடுவதினாலே
பயிர்கள் வில்லையும் பூமியிலே
கூட்டின் கதவை திறந்தாள் தானே
பறவை பறக்கும் வானத்திலே

வாழ்க்கையின் பாதை
எங்கோ போகும்
வாசலில் இதயம் யாரை தேடும்


ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ

நதிகளின் தண்ணீர்
வயல்களில் சேரும்
கரைகள் கண்ணீர் வடிக்காது
அணைகள் திறக்க மறுக்காது
ஓ ஹோ மறுத்தால் உயிர்கள் இருக்காது

உளியின் அடிகளை
தாங்கிடும் கற்கள்
ஊரில் சிலையாய் ஒளிவீசும்
வழியை தாங்கும் இதயத்தை
ஓ ஹோ வாழ்த்தி இந்த ஊர் பேசும்

ஓ மனிதாஓ ஹோ
ஓட்டையில் கோட்டை
ஒன்பது வாசல்
உள்ளே இருக்குது ஒரு ஜீவன்
பாட்டுகள் பாட
ஆட்டங்கள் ஆட
பார்த்து ரசிப்பேன் உன் தேவன்

வாழ்க்கையின் பாதை
எங்கோ போகும்
வாசலில் இதயம் யாரை தேடும்
காணும் விழியில் காட்சிகள் இல்லை
கண்டால் எதுவும் கைகளில் இல்லை

காலம் வரும்
ஒரு நேரம் வாரும்
கதை எல்லாம் இங்கே மாறும்
கனவில் வரும்
சில சோகங்களில்
புது கதையை வாழ்க்கை கூறும்

ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ
ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ