Vaazhukindra Makkalukku |
---|
இருப்பவர்க்கு ஒரு வீடு
இல்லாதவர்க்கு பல வீடு
யாரை நம்பி யாரும் இல்ல
ஆண்டவன் துணையை நீ தேடு
வாழுகின்ற மக்களுக்கு
வாழ்ந்தவர்கள் பாடமடி
பெற்றவர்கள் பட்ட கடன்
பிள்ளைகளைச் சேருமடி
சேர்த்து வச்ச புண்ணியம்தான்
சந்ததியைக் காக்குமடி
சேர்த்து வச்ச புண்ணியம்தான்
சந்ததியைக் காக்குமடி
அந்த வகையில் இந்த நிலையில்
எனக்கோர் காவல் ஏதடி
வாழுகின்ற மக்களுக்கு
வாழ்ந்தவர்கள் பாடமடி
பெற்றவர்கள் பட்ட கடன்
பிள்ளைகளைச் சேருமடி
ஆடொன்று வளர்ப்பார்கள் தன் வீட்டில்
மிக அன்பாக மேய்ப்பார்கள் வயக்காட்டில்
ஆடொன்று வளர்ப்பார்கள் தன் வீட்டில்
மிக அன்பாக மேய்ப்பார்கள் வயக்காட்டில்
உறவொன்று விருந்தென்று வரும் போது
இந்த வெள்ளாடு உணவாகும் அப்போது
உறவொன்று விருந்தென்று வரும் போது
இந்த வெள்ளாடு உணவாகும் அப்போது
வாழுகின்ற மக்களுக்கு
வாழ்ந்தவர்கள் பாடமடி
பெற்றவர்கள் பட்ட கடன்
பிள்ளைகளைச் சேருமடி
தெரியாமல் அடிப்பார்கள் தெரிந்தவர்கள்
உண்மை புரியாமல் வெறுப்பார்கள் நல்லவர்கள்
தெரியாமல் அடிப்பார்கள் தெரிந்தவர்கள்
உண்மை புரியாமல் வெறுப்பார்கள் நல்லவர்கள்
சரியான நேரத்திலே தெய்வம் வரும்
எது சரியென்று உள்ளங்கள் தெளிந்து விடும்
சரியான நேரத்திலே தெய்வம் வரும்
எது சரியென்று உள்ளங்கள் தெளிந்து விடும்
வாழுகின்ற மக்களுக்கு
வாழ்ந்தவர்கள் பாடமடி
பெற்றவர்கள் பட்ட கடன்
பிள்ளைகளைச் சேருமடி
சேர்த்து வச்ச புண்ணியம்தான்
சந்ததியைக் காக்குமடி
சேர்த்து வச்ச புண்ணியம்தான்
சந்ததியைக் காக்குமடி
அந்த வகையில் இந்த நிலையில்
எனக்கோர் காவல் ஏதடி
வாழுகின்ற மக்களுக்கு
வாழ்ந்தவர்கள் பாடமடி
பெற்றவர்கள் பட்ட கடன்
பிள்ளைகளைச் சேருமடி