Vaazhvadhilum Nalam Soozhvadhilum |
---|
வாழ்வதிலும் நலம்
சூழ்வதிலும் புவி
மக்களெல்லாம் ஒப்புடையார்
வாழ்வதிலும் நலம்
சூழ்வதிலும் புவி
மக்களெல்லாம் ஒப்புடையார்
ஏழ்மையில் மக்களைத் தள்ளுவதோ
இதை இன்பமெனச் சிலர் கொள்ளுவதோ
ஏழ்மையில் மக்களைத் தள்ளுவதோ
இதை இன்பமெனச் சிலர் கொள்ளுவதோ)
கூழுக்குப் பற்பலர் வாடவும்
சிற்சிலர் கொள்ளையடிப்பதுவும் நீதியோ
ஓஒஓஓஒஓ
கூழுக்குப் பற்பலர் வாடவும்
சிற்சிலர் கொள்ளையடிப்பதுவும் நீதியோ
புவி வாழ்வதுதான் எந்த தேதியோ
புவி வாழ்வதுதான் எந்த தேதியோ
சிற்சிலர் வாழ்ந்திட
பற்பலர் உழைத்துத் தீர்க
எனும் இந்த லோகமே
சிற்சிலர் வாழ்ந்திட
பற்பலர் உழைத்துத் தீர்க
எனும் இந்த லோகமே
உறுவற்றொழிந்தாலும் நன்றாகுமே
காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்
அவன் காணத்தகுந்தது வறுமையோ
காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்
அவன் காணத்தகுந்தது வறுமையோ
அவன் பூணத்தகுந்தது பொறுமையோ
மக்களெல்லாம் சமமாக அடைந்திட
மானிலம் தந்ததில் பஞ்சமோ
மக்களெல்லாம் சமமாக அடைந்திட
மானிலம் தந்ததில் பஞ்சமோ
பசிமிக்கவரின் தொகை கொஞ்சமோ
பசிமிக்கவரின் தொகை கொஞ்சமோ