Vaazhvil Sowbagiyam |
---|
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
வந்தேன் என்றது
தேன் தந்தேன் என்றது
என் அங்கமே உன்னிடம் சங்கமம்
என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம்
என் அங்கமே உன்னிடம் சங்கமம்
என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம்
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
வந்தேன் என்றது
தேன் தந்தேன் என்றது
தேவன் கலைக் கோயில் பூந்தேர் ஒன்று
தேவி வடிவாக கண்டேன் இன்று
தேவன் கலைக் கோயில் பூந்தேர் ஒன்று
தேவி வடிவாக கண்டேன் இன்று
பூவிதழ் தன்னை பறித்து
பூஜையை மெல்ல நடத்து
பூவிதழ் தன்னை பறித்து
பூஜையை மெல்ல நடத்து
தொடங்கும் தொடரும் சுகங்களை நினைத்து
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
வந்தேன் என்றது
தேன் தந்தேன் என்றது
நானறியாத ரகசியம் ஒன்று
நூலிடை பார்த்தேன் தெரிந்தது இன்று
நானறியாத ரகசியம் ஒன்று
நூலிடை பார்த்தேன் தெரிந்தது இன்று
தாலாட்டவா மன்னவா
உன்னையும் பிள்ளை போல் நான் தாயான போதும்
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
லலாலால லா லலாலால லா
லலாலால லா லலாலால லா
தாலாட்டவா மன்னவா
உன்னையும் பிள்ளை போல் நான் தாயான போதும்
மணிப் பிள்ளை போலே
மார்பில் நான் ஆட வேண்டும்
மணிப் பிள்ளை போலே
மார்பில் நான் ஆட வேண்டும்
மயக்கம் கொடுக்கும் மலரணை அது அல்லவா
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
வந்தேன் என்றது
தேன் தந்தேன் என்றது
வண்ணக் கொடி தந்த முல்லைச் செண்டு
வந்து விளையாடும் பிள்ளை என்று
வண்ணக் கொடி தந்த முல்லைச் செண்டு
வந்து விளையாடும் பிள்ளை என்று
மோகன ராகம் படித்து
மூவரும் கைகள் இணைத்து
மோகன ராகம் படித்து
மூவரும் கைகள் இணைத்து
நடத்தும் பயணம் நலம் பெற வாழ்த்து
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
வந்தேன் என்றது
தேன் தந்தேன் என்றது
வந்தேன் என்றது
தேன் தந்தேன் என்றது