Vaigai Nathioram Duet

Vaigai Nathioram Duet Song Lyrics In English


எண்ணம் என்னும் ஏட்டில்
நான் பாடும் பாட்டில்
நீ வாழ்கிறாய்
நித்தம் வரும் மூச்சில்

வைகை நதியோரம்
பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள்
காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது

இது அன்பின் வேதம்
அதை நாளும் ஓதும்
இது அன்பின் வேதம்
நாளும் ஓதும் காத்தே

வைகை நதியோரம்
பொன்மாலை நேரம் காத்தாடுது
ஆமா
கள்வடியும் பூக்கள்
காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
கரெக்ட்டு இது கரெக்ட்டு

மாலை மழை மேகம் தன்னை
மெதுவாய் அழைத்தேன்
துணை வர வேண்டுமென்று
தூது சொல்லத்தான்

மூண்டு வரும் மோகம் தன்னை
மடலாய் வரைந்தேன்
நினைவுகள் பூத்த வண்ணம்
நானும் மெல்லத்தான்

ஓர் சோலை புஷ்பம்தான்
திரு கோயில் சிற்பம்தான்
ஓர் சோலை புஷ்பம்தான்
திரு கோயில் சிற்பம்தான்

இதன்  தாளம் ராகம்
பாவம் அன்பை கூறும்

வைகை நதியோரம்
பொன்மாலை நேரம் காத்தாடுது


யாரின் மனம் யாருக்கென்று
இறைவன் வகுத்தான்
இரு மனம் சேர்வதிங்கு
தேவன் சொல்லித்தான்

பூஜைக்கிது ஏற்றதென்று
மலரை படைத்தான்
தலைவனும் மாலையென்று
சூடிக்கொள்ளத்தான்

ஓர் நெஞ்சின் ராகம்தான்
விழி பாடும் நேரம்தான்
ஓர் நெஞ்சின் ராகம்தான்
விழி பாடும் நேரம்தான்

இது அன்பின் வேதம்
நாளும் ஓதும் காற்றே

வைகை நதியோரம்
பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள்
காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது

இது அன்பின் வேதம்
அதை நாளும் ஓதும்
இது அன்பின் வேதம்
நாளும் ஓதும் காத்தே

வைகை நதியோரம்
பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள்
காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது