Valartha Kada |
---|
வளர்த்த கடா முட்ட வந்தா
வச்ச செடி முள்ளானா
போன ஜென்மம் பாவமடி அம்மாளு
தொட்டிலிலே பாம்பிருந்தா
தோளிலே புலி கெடந்தா
பெத்தவங்க தலையெழுத்து அம்மாளு
பெத்தவங்க தலையெழுத்து அம்மாளு
வளர்த்த கடா முட்ட வந்தா
வச்ச செடி முள்ளானா
போன ஜென்மம் பாவமடி அம்மாளு
தொட்டிலிலே பாம்பிருந்தா
தோளிலே புலி கெடந்தா
பெத்தவங்க தலையெழுத்து அம்மாளு
பெத்தவங்க தலையெழுத்து அம்மாளு
முத்தமிட்டும் ஆசை இல்லே
சித்தத்திலும் பாசமில்லே
முத்தமிட்டும் ஆசை இல்லே
சித்தத்திலும் பாசமில்லே
ரத்தம் என்ன ஆச்சுதடி அம்மாளு
வித்து விட்ட மாடுகளும்
வீடு கண்டு திரும்ப வரும்
பெத்த புள்ள ஓடுதடி அம்மாளு
புத்தி கெட்டு பொறக்க வெச்சான் அம்மாளு
வளர்த்த கடா முட்ட வந்தா
வச்ச செடி முள்ளானா
போன ஜென்மம் பாவமடி அம்மாளு
போன ஜென்மம் பாவமடி அம்மாளு
கண்ணிலே ஈரமில்லே
கைச்சோறும் இறங்கவில்லே
கண்ணிலே ஈரமில்லே
கைச்சோறும் இறங்கவில்லே
எண்ணமெல்லாம் துடிக்குதடி அம்மாளு
மண்ணிலே நான் நடந்தா
மண்கூடக் கும்பிடுமே
என் புள்ளே பகைச்சுதடி அம்மாளு
ரெண்டு பெத்து ஒன்னு கெட்டுது அம்மாளு
வளர்த்த கடா முட்ட வந்தா
வச்ச செடி முள்ளானா
போன ஜென்மம் பாவமடி அம்மாளு
போன ஜென்மம் பாவமடி அம்மாளு
ஊரிலே பேரிருக்க
உற்றவங்க மதிப்பிருக்க
வேறு வழி தெரியலையே அம்மாளு
ஊரிலே பேரிருக்க
உற்றவங்க மதிப்பிருக்க
வேறு வழி தெரியலையே அம்மாளு
தோளிலே போட்டதுண்டு
காலிலே விழுந்துவிட்டா
வாழ்விலே அர்த்தமென்ன அம்மாளு
பிள்ளை வகையாக மாறுவது எந்நாளு
பிள்ளை வகையாக மாறுவது எந்நாளு
பிள்ளை வகையாக மாறுவது எந்நாளு