Valartha Kada

Valartha Kada Song Lyrics In English


வளர்த்த கடா முட்ட வந்தா
வச்ச செடி முள்ளானா
போன ஜென்மம் பாவமடி அம்மாளு
தொட்டிலிலே பாம்பிருந்தா
தோளிலே புலி கெடந்தா
பெத்தவங்க தலையெழுத்து அம்மாளு
பெத்தவங்க தலையெழுத்து அம்மாளு

வளர்த்த கடா முட்ட வந்தா
வச்ச செடி முள்ளானா
போன ஜென்மம் பாவமடி அம்மாளு
தொட்டிலிலே பாம்பிருந்தா
தோளிலே புலி கெடந்தா
பெத்தவங்க தலையெழுத்து அம்மாளு
பெத்தவங்க தலையெழுத்து அம்மாளு

முத்தமிட்டும் ஆசை இல்லே
சித்தத்திலும் பாசமில்லே

முத்தமிட்டும் ஆசை இல்லே
சித்தத்திலும் பாசமில்லே
ரத்தம் என்ன ஆச்சுதடி அம்மாளு
வித்து விட்ட மாடுகளும்
வீடு கண்டு திரும்ப வரும்
பெத்த புள்ள ஓடுதடி அம்மாளு
புத்தி கெட்டு பொறக்க வெச்சான் அம்மாளு

வளர்த்த கடா முட்ட வந்தா
வச்ச செடி முள்ளானா
போன ஜென்மம் பாவமடி அம்மாளு
போன ஜென்மம் பாவமடி அம்மாளு

கண்ணிலே ஈரமில்லே
கைச்சோறும் இறங்கவில்லே


கண்ணிலே ஈரமில்லே
கைச்சோறும் இறங்கவில்லே
எண்ணமெல்லாம் துடிக்குதடி அம்மாளு
மண்ணிலே நான் நடந்தா
மண்கூடக் கும்பிடுமே
என் புள்ளே பகைச்சுதடி அம்மாளு
ரெண்டு பெத்து ஒன்னு கெட்டுது அம்மாளு

வளர்த்த கடா முட்ட வந்தா
வச்ச செடி முள்ளானா
போன ஜென்மம் பாவமடி அம்மாளு
போன ஜென்மம் பாவமடி அம்மாளு

ஊரிலே பேரிருக்க
உற்றவங்க மதிப்பிருக்க
வேறு வழி தெரியலையே அம்மாளு

ஊரிலே பேரிருக்க
உற்றவங்க மதிப்பிருக்க
வேறு வழி தெரியலையே அம்மாளு
தோளிலே போட்டதுண்டு
காலிலே விழுந்துவிட்டா
வாழ்விலே அர்த்தமென்ன அம்மாளு
பிள்ளை வகையாக மாறுவது எந்நாளு
பிள்ளை வகையாக மாறுவது எந்நாளு
பிள்ளை வகையாக மாறுவது எந்நாளு