Vanakkam Mudhal Variyai |
---|
வணக்கம் முதல் வரியை எழுதும் முன் என் முகவரியை எழுத எண்ணினேன் பிறகு தான் வாழ்த்துகின்ற இதயத்துக்கு விசாலம் தான் முக்கியமே தவிர விலாசம் முக்கியமல்ல என்று விட்டு விட்டேன்
புஷ்பங்கள் கைதட்டி கூப்பிடாமலயே வண்டுகள் வருவது போல் உந்தன் நடன அரங்கை நோக்கி நகர் தானாகவே நகர்ந்து நகர்ந்து வருகிறது காரணம் அபிநயம் என்று சொல்லை நீங்கள் அதிசயம் என்று அர்த்தப்படுத்துகிறீர்கள்
காற்றுக்கூட காற்சலங்கை கட்டி விடக்கூடிய கெட்டிக்காரர் நீங்கள் காற்றுக்கூட காற்சலங்கை கட்டி விடக்கூடிய கெட்டிக்காரர் நீங்கள் அஹஹாஹ்ஹா
உங்களை சிருஷ்டித்த கர்வத்தில் கலைமகளே தலைகனத்து நிற்கிறாள்
ஓஹோ புரிகிறது ஒரு பைத்தியம் என்று என்னை பரிகசிக்கிறீர்களோ ஆம் பைத்தியம் தான் பைத்தியம் தான் நான் ஒரு தமிழ் பைத்தியம் பின் குறிப்பு விட்டு விட்டு வந்த என் இதயத்தை விரைவில் திருப்பி அனுப்பவும்
படித்தேன் படித்தேன் கடிதம் அடடா வரிகள் அமுதம் படித்தேன் படித்தேன் கடிதம் அடடா வரிகள் அமுதம் பேப்பர் அரங்கம் முழுதும் உந்தன் பேனா முனையின் நடனம் பேனா முனையின் நடனம்
உன் சித்திரம் கண் முற்றிலும் வரைந்தாக வேண்டும் நேரில் வா உன் சித்திரம் கண் முற்றிலும் வரைந்தாக வேண்டும் நேரில் வா
சொப்னங்கள் உன்னைத்தேட சுவாசங்கள் உஷ்ணம் ஏற நினைக்கும் நினைப்பே கருக நீ அணைக்கும் படையாய் வருக அணைக்கும் படையாய் வருக
என் சிநேகிதரே உங்கள் எழுத்துக்களின் இனிப்பிற்கு எறும்புகள் வரக்கூடும் என்பதால் கடிதத்தை என் மார்சிறையில் மறைத்து வைத்திருக்கிறேன் தபால்களையே தாம்பூலங்களாக கொண்டு
நமக்குள் ஒரு நிச்சியதார்த்தமே நிகழ்ந்து விட்டதோ இனி சொப்பனங்களில் என்னைத் தேட வேண்டாம்
வியாழன் மாலை வருவேன் விழிக்கோர் விருந்தை தருவேன் வியாழன் மாலை வருவேன் விழிக்கோர் விருந்தை தருவேன்
பாரதி சிலையின் ஓரம் எதிர்ப்பார்த்திருங்கள் அந்தி நேரம் எதிர்ப்பார்த்திருங்கள் அந்தி நேரம்
உப்புக்கடல் கற்புக்கெட தொடுவானம் தீண்டும் வேளையில் உப்புக்கடல் கற்புக்கெட தொடுவானம் தீண்டும் வேளையில்
மையிட்ட கண்ணால் நீயும் கையொப்பம் இட்டாய் கண்ணே தனிமை சுகங்கள் முழுக்க நீ தவணை முறையில் கொடுக்க
தினமும் தினமும் வருக தணலில் மெழுகாய் உருக முதுமை வரையில் இனிமேல் இந்த பதுமை அடியேன் மடியில் பதுமை அடியேன் மடியில்