Vanakkam Mudhal Variyai

Vanakkam Mudhal Variyai Song Lyrics In English


வணக்கம் முதல் வரியை எழுதும் முன் என் முகவரியை எழுத எண்ணினேன் பிறகு தான் வாழ்த்துகின்ற இதயத்துக்கு விசாலம் தான் முக்கியமே தவிர விலாசம் முக்கியமல்ல என்று விட்டு விட்டேன்

புஷ்பங்கள் கைதட்டி கூப்பிடாமலயே வண்டுகள் வருவது போல் உந்தன் நடன அரங்கை நோக்கி நகர் தானாகவே நகர்ந்து நகர்ந்து வருகிறது காரணம் அபிநயம் என்று சொல்லை நீங்கள் அதிசயம் என்று அர்த்தப்படுத்துகிறீர்கள்

காற்றுக்கூட காற்சலங்கை கட்டி விடக்கூடிய கெட்டிக்காரர் நீங்கள் காற்றுக்கூட காற்சலங்கை கட்டி விடக்கூடிய கெட்டிக்காரர் நீங்கள் அஹஹாஹ்ஹா

உங்களை சிருஷ்டித்த கர்வத்தில் கலைமகளே தலைகனத்து நிற்கிறாள்

ஓஹோ புரிகிறது ஒரு பைத்தியம் என்று என்னை பரிகசிக்கிறீர்களோ ஆம் பைத்தியம் தான் பைத்தியம் தான் நான் ஒரு தமிழ் பைத்தியம் பின் குறிப்பு விட்டு விட்டு வந்த என் இதயத்தை விரைவில் திருப்பி அனுப்பவும்

படித்தேன் படித்தேன் கடிதம் அடடா வரிகள் அமுதம் படித்தேன் படித்தேன் கடிதம் அடடா வரிகள் அமுதம் பேப்பர் அரங்கம் முழுதும் உந்தன் பேனா முனையின் நடனம் பேனா முனையின் நடனம்

உன் சித்திரம் கண் முற்றிலும் வரைந்தாக வேண்டும் நேரில் வா உன் சித்திரம் கண் முற்றிலும் வரைந்தாக வேண்டும் நேரில் வா

சொப்னங்கள் உன்னைத்தேட சுவாசங்கள் உஷ்ணம் ஏற நினைக்கும் நினைப்பே கருக நீ அணைக்கும் படையாய் வருக அணைக்கும் படையாய் வருக


என் சிநேகிதரே உங்கள் எழுத்துக்களின் இனிப்பிற்கு எறும்புகள் வரக்கூடும் என்பதால் கடிதத்தை என் மார்சிறையில் மறைத்து வைத்திருக்கிறேன் தபால்களையே தாம்பூலங்களாக கொண்டு

நமக்குள் ஒரு நிச்சியதார்த்தமே நிகழ்ந்து விட்டதோ இனி சொப்பனங்களில் என்னைத் தேட வேண்டாம்

வியாழன் மாலை வருவேன் விழிக்கோர் விருந்தை தருவேன் வியாழன் மாலை வருவேன் விழிக்கோர் விருந்தை தருவேன்

பாரதி சிலையின் ஓரம் எதிர்ப்பார்த்திருங்கள் அந்தி நேரம் எதிர்ப்பார்த்திருங்கள் அந்தி நேரம்

உப்புக்கடல் கற்புக்கெட தொடுவானம் தீண்டும் வேளையில் உப்புக்கடல் கற்புக்கெட தொடுவானம் தீண்டும் வேளையில்

மையிட்ட கண்ணால் நீயும் கையொப்பம் இட்டாய் கண்ணே தனிமை சுகங்கள் முழுக்க நீ தவணை முறையில் கொடுக்க

தினமும் தினமும் வருக தணலில் மெழுகாய் உருக முதுமை வரையில் இனிமேல் இந்த பதுமை அடியேன் மடியில் பதுமை அடியேன் மடியில்