Vanathai Kadavul Thalaiyal |
---|
ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு ஜான் வயிறு
உனக்கு மட்டும் என்ன ஒன்பது வயிறு
தேவைக்கு மேலே சேமிச்ச ஆளு
ஆஅஆஆஆ
திருடனுன்னுதான் ஊர்லே பேரு
வானத்தை கடவுள் தலையால் அளந்தான்
பூமியை அவனே காலால் அளந்தான்
மனுஷனை எல்லாம் மனசால் அளந்தான்
ஓஹ்ஹோய்
என் மாமனை மட்டும் பணத்தால் அளந்தான்
அழகா பொறந்தது உனக்கொரு பொண்ணு
ஆடுது பார் அது மேடையில் நின்னு
மனுஷா உனக்கும் இருக்குது கண்ணு
உன் மண்டையில் மட்டும் ஏன் களிமண்ணு
வானத்தை கடவுள் தலையால் அளந்தான்
பூமியை அவனே காலால் அளந்தான்
அன்றொருவன் தேர் கொடுத்தான்
அடுத்தொருவன் தலை கொடுத்தான்
கேடு கெட்ட மாமாவோ
கிழிஞ்ச குடை கொடுத்தான்
கிழிஞ்ச குடைக்கல்லவோ
வள்ளல் என்று பேரெடுத்தான்
அந்த வள்ளல் மானமெல்லாம்
சந்தியிலே இவன் கெடுத்தான்
கர்ணன் பொறந்தது நாட்டுக்குப் பெருமை
கம்பன் பொறந்தது தமிழுக்குப் பெருமை ஆஆ
கம்பன் பொறந்தது தமிழுக்குப் பெருமை
பெருமையில்லாதவன் பொறந்தது கொடுமை
மாமா கொடுமை
பெருமையில்லாதவன் பொறந்தது கொடுமை
உன் பொறந்த நாளிலே இதுதான் புதுமை
வானத்தை கடவுள் தலையால் அளந்தான்
பூமியை அவனே காலால் அளந்தான்