Vanavillena Vandhu |
---|
வானவில்லென வந்து காதலின் வர்ண ஜாலங்கள் காட்டினாய் மாசில்லாத என் உள்ள வீணையில் மௌன கீதங்கள் மீட்டினாய்
வாழ்வின் ஆனந்தப் பொன் மூலைகளில் வந்து பேரொளி வீசினாய் வாழ்க நீ எந்தன் உள்ளக் கோயிலில் வாழ்க வாழ்க நீ என்றுமே
வான வீதியில் ஓடும் மேகங்கள் வர்ண வில்லினை மூடுமோ மாசில்லாத என் உள்ளக் கோட்டைகள் மண்ணில் விழுந்து மண்ணாகுமோ
தேனில் தோய்ந்தெழும் எந்தன் ஆசைகள் தேய்ந்து மாய்ந்திடும் காலமோ தீருமோ துயர் மாறுமோ அறியாது என் மனம் ஏங்குதே