Vande Mataram

Vande Mataram Song Lyrics In English


பாடலாசிரியர் : புலமைபித்தன்



வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்

செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் முப்பது கோடி முகம் உடையாள் உயிர் மொய்புற ஒன்றுடையாள்

நான் ஓர் வெள்ளி பனியில் துள்ளி திரியும் பொண்ணு இனிக்கும் ஆப்பிள் பழமும் எங்கள் மொழியும் ஒன்னு

காஷ்மீர் மொழி ரோஜாச் செண்டு ஹஸல் என்னும் பாடல் உண்டு காஷ்மீர் மொழி ரோஜாச் செண்டு ஹஸல் என்னும் பாடல் உண்டு

நான் ஓர் வெள்ளி பனியில் துள்ளி திரியும் பொண்ணு

செந்தமிழ் என்பது எங்கள் மொழி குறள் தேன்மறை தந்த மொழி செந்தமிழ் என்பது எங்கள் மொழி குறள் தேன்மறை தந்த மொழி வந்தவர் யாரேனும் வாழ்த்தும் மொழி இந்த வையத்தின் மூத்த மொழி



வங்காளம் சிங்கம் நேதாஜி தந்த பெருமை எங்கள் மொழியை சாரும் உலகம் போற்றும் கவியரசர் தாகூர் ஒருவன் போதும் எங்கள் பெயர் சொல்ல எங்கள் பெயர் சொல்ல எங்கள் பெயர் சொல்ல



கலங்கள் எங்கும் கொஞ்சும் எங்கள் நாடல்லோ பலாவும் தேனும் சேர்த்து பேசும் பேச்சல்லோ மலையாளம் எங்கள் தாயின் தாயல்லோ எழுத்தச்சன் வந்து அச்சரம் தந்தல்லோ முன்னே நாங்கள் பின்னே சேரன் கேரளராயல்லோ முன்னே நாங்கள் பின்னே சேரன் கேரளராயல்லோ

வீரத்துக்கு வீரன் தந்த சிவாஜி அன்னை மொழி எங்கள் மராத்தி நெஞ்சில் இனிக்கும் மராத்தி தேசம் தன்னை காக்க வந்த திலகன் தந்த மொழி அதுவும் மராத்தி என்றும் அவரை நினைந்து பாடுவோம் ஆடுவோம் மேன்மையை போற்றுவோம்

நல்ல தேனில் செய்த ஓசை எங்கள் தெலுங்கு என்னும் பாஷை இது கோதாவரி தீரம் செல்வம் கொழிச்சு வந்ததாகும் கீர்த்தனையின் நாதம் கேட்கும் எந்நாளும் கீர்த்தி கொண்ட எங்கள் அன்னை மொழியே

கன்னடம் எங்கள் மொழி பல காவியம் தந்த மொழி ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் இலக்கியம் ஆயிரம் கண்ட மொழி எங்கள் அன்புக்குரிய மொழி ராகவேந்திர சாமியை கண்டதும் தந்ததும் எங்களின் தங்க வயல் என்று பாடடி ஞானக்குயில்

ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு

ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு