Vandhadhu Vandhadhu Vaasalil Vandhadhu

Vandhadhu Vandhadhu Vaasalil Vandhadhu Song Lyrics In English


தந்தன னானன தந்தன னானன
தந்தன னானன தந்தா
ஆஹ ஹாஹா ஆ ஆ ஆஆ
தந்தன னானன தந்தன னானன
தந்தன னானன தந்தா
ஆஹ ஹாஹா ஆ ஆ ஆஆ
தந்தன னானன தந்தன னானன
தந்தன னானன தந்தா
ஆஹ ஹாஹா ஆ ஆ ஆஆ
தந்தனனம் தந்தனனம் தனனம்
தந்தனனம் தந்தனனம் தனனம்

வந்தது வந்தது
வாசலில் வந்தது சொந்தம் தானே
தந்தது தந்தது தா எனத் தந்தது
இன்பம் தானே

சந்தனமேகுங்குமமே
சந்தனமேகுங்குமமே
வந்திடும் முன்னே
இனி நீயும் நானும் ஒன்று
ஜீவன் தேகம் என்று

வந்தது வந்தது
வாசலில் வந்தது சொந்தம் தானே
தந்தது தந்தது தா எனத் தந்தது
இன்பம் தானே

அன்னையின் நெஞ்சினில்
அன்றொரு மந்திரம் சொல்லியது
இன்பம் அது துள்ளியது
எனதுயிர் பிள்ளையின் கண்களில்
பண்பொடு பாசமும் மின்னியது
என் மனதைப் பின்னியது

முந்தைய நாளினில்
என் பலம் என்பது
வந்தது பொய்கை கூடியது
சொந்தம் இணைந்தது
சிந்துகள் பாடியது
மங்கல வாழ்த்தொளி
இங்கிலும் எங்கிலும்
சங்கமமாய் சதிராடியது
சந்திரன் சூரியன்
ஒன்றெனக் கூடியது
சிந்தித்தால் தித்திக்கும்
சொந்தம் யாவும்
சந்தித்தால் சொர்க்கம்தான்
சொந்தம் ஆகும்

வந்தது வந்தது
வாசலில் வந்தது சொந்தம் தானே
தந்தது தந்தது தா எனத் தந்தது
இன்பம் தானே

சந்தனமேகுங்குமமே
சந்தனமேகுங்குமமே
வந்திடும் முன்னே
இனி நீயும் நானும் ஒன்று
ஜீவன் தேகம் என்று

வந்தது வந்தது
வாசலில் வந்தது சொந்தம் தானே
தந்தது தந்தது தா எனத் தந்தது
இன்பம் தானே




கட்டிய மல்லிகை மொட்டுகள் கொட்டிய
தொட்டிலிலே செந்தமிழின் மெட்டினிலே
சுகம் அது தொட்டது சுவைகளை கொட்டுது
மனம் எனும் வீட்டினிலே
நறு மலர்களின் கூட்டினிலே

மெல்லிய புன்னகை
சொல்லிய மெல்லிசை
மல்லிகை போல் மணம் வீசியது
ஆயிரம் காவியம் நேரினில் பேசியது
அன்னையின் கண்களில்
அன்பெனும் செம்மயில்
ஆயிரம் தீபம் பாடியது

கங்கையும் காவிரி
ஒன்றெனக் கூடியது
சிந்தைக்குள் எங்கெங்கும்
உந்தன் கோலம்
சொந்தத்தால் பந்தத்தால்
என்றும் வாழும்

வந்தது வந்தது
வாசலில் வந்தது சொந்தம் தானே
தந்தது தந்தது தா எனத் தந்தது
இன்பம் தானே

சந்தனமேகுங்குமமே
சந்தனமேகுங்குமமே
வந்திடும் முன்னே
இனி நீயும் நானும் ஒன்று
ஜீவன் தேகம் என்று

வந்தது வந்தது
வாசலில் வந்தது சொந்தம் தானே
தந்தது தந்தது தா எனத் தந்தது
இன்பம் தானே