Vangi Vanden

Vangi Vanden Song Lyrics In English


வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்த பின்னே அது தாழை மரம்
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்த பின்னே அது தாழை மரம்

இளவாழத்தண்டு முள்ளானதா
என் கைகள் தீண்ட விறகானதா
அழுதாலும் தொழுதாலும் வழியே கிடையாதா

வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்த பின்னே அது தாழை மரம்

பாய் போட்டு வச்சிருக்கு
நீயில்லாம பாலும் பாழானது
என் மேலே குத்தமில்லை
வா கண்ணம்மா உறங்கி நாளானது

அன்று சொன்ன வார்த்தை
மெய்யில்லை பெண்ணே
இன்று சொல்லும் வார்த்தை
பொய்யில்லை கண்ணே

வழி விட்டு கொடுக்க
வாய்விட்டு அழுதேன்
விரல் என்னை வெறுத்தால்
இந்த நகம் எங்கு போவேன்

வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்த பின்னே அது தாழை மரம்


பொம்பளைங்க கண்ணீர் விட்டா
ஊர் தாங்காது பூமி ரெண்டாகுமே
ஆம்பளைங்க கண்ணீர் விட்டா
யார் கேட்பாக இல்லை அனுதாபமே

கார்த்திகை போனால் மழை இல்லை மானே
கருணையும் போனால் வாழ்வில்லை தானே
உந்தன் மனம் கரும்பா இல்லை அது இரும்பா
வெண்ணிலவும் இருக்க இங்கு இருளோடு வாழ்வா

வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்த பின்னே அது தாழை மரம்

இளவாழத்தண்டு முள்ளானதா
என் கைகள் தீண்ட விறகானதா
அழுதாலும் தொழுதாலும் வழியே கிடையாதா

வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்த பின்னே அது தாழை மரம்
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்த பின்னே அது தாழை மரம்