Vangi Vanden |
---|
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்த பின்னே அது தாழை மரம்
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்த பின்னே அது தாழை மரம்
இளவாழத்தண்டு முள்ளானதா
என் கைகள் தீண்ட விறகானதா
அழுதாலும் தொழுதாலும் வழியே கிடையாதா
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்த பின்னே அது தாழை மரம்
பாய் போட்டு வச்சிருக்கு
நீயில்லாம பாலும் பாழானது
என் மேலே குத்தமில்லை
வா கண்ணம்மா உறங்கி நாளானது
அன்று சொன்ன வார்த்தை
மெய்யில்லை பெண்ணே
இன்று சொல்லும் வார்த்தை
பொய்யில்லை கண்ணே
வழி விட்டு கொடுக்க
வாய்விட்டு அழுதேன்
விரல் என்னை வெறுத்தால்
இந்த நகம் எங்கு போவேன்
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்த பின்னே அது தாழை மரம்
பொம்பளைங்க கண்ணீர் விட்டா
ஊர் தாங்காது பூமி ரெண்டாகுமே
ஆம்பளைங்க கண்ணீர் விட்டா
யார் கேட்பாக இல்லை அனுதாபமே
கார்த்திகை போனால் மழை இல்லை மானே
கருணையும் போனால் வாழ்வில்லை தானே
உந்தன் மனம் கரும்பா இல்லை அது இரும்பா
வெண்ணிலவும் இருக்க இங்கு இருளோடு வாழ்வா
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்த பின்னே அது தாழை மரம்
இளவாழத்தண்டு முள்ளானதா
என் கைகள் தீண்ட விறகானதா
அழுதாலும் தொழுதாலும் வழியே கிடையாதா
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்த பின்னே அது தாழை மரம்
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்த பின்னே அது தாழை மரம்