Vanjikodi Poovanathu

Vanjikodi Poovanathu Song Lyrics In English


வஞ்சிக்கொடிபூவானது
யாரைக் கேட்டு ஆளானது
வஞ்சிக்கொடிபூவானது
யாரைக் கேட்டு ஆளானது
சோகம் வந்து தழுவும் இவளை
பேதை நெஞ்சில் தினமும் கவலை

வஞ்சிக்கொடி ஆஹபூவானது
யாரைக் கேட்டு ஆளானது

தேவைகள் தீர்க்கவா
நான் உன்னை நாடினேன்
பெண்மையின் காவலாய்
ஆண் துணை தேடினேன்
கைக் கொடுத்தால்கண்ணகி நான்
கை விரித்தால் மாதவிதான்

பூங்கொடிக்கு துணையிருந்தால்
வேறு பக்கம் சாயாது
காவிரிக்கு அணையிருந்தால்
வேறு திசை பாயாது
மேலாடை பூக்கள் கண்டால்
காமக் கண்கள் தாளாது

வஞ்சிக்கொடிஆபூவானது
யாரைக் கேட்டு ஆளானது
சோகம் வந்து தழுவும் இவளை
பேதை நெஞ்சில் தினமும் கவலை

வஞ்சிக்கொடிஹஹபூவானது
யாரைக் கேட்டு ஆளானது


பாதையின்றி யாத்திரைகள்
விடிந்த பின்னும் ராத்திரிகள்

கல்யாணம் இல்லாமல்
கைச்சேர்க்க ஆளுண்டு
பொன்தேகம் தீண்டாமல்
பூச்சூட யாருண்டு
தேனுண்ண வண்டு வந்தால்
கேள்வி கேட்கும் பூவின்று

வஞ்சிக்கொடிபூவானது
யாரைக் கேட்டு ஆளானது
சோகம் வந்து தழுவும் இவளை
பேதை நெஞ்சில் தினமும் கவலை

வஞ்சிக்கொடி ஆஹஹபூவானது
யாரைக் கேட்டு ஆளானது