Vanna Karunkuzhal |
---|
வண்ணக் கருங்குழல்
வள்ளிக் குறமகள்
வேலனை மாலையிட்டாள்
அந்தப் புண்ணியக் காவியம்
எண்ணி இசைத்திட
என்னையும் ஆணையிட்டாள்
என்னையும் ஆணையிட்டாள்
கண்டேன் கனியொன்று கண்டேன்
கண்டேன் கனியொன்று கண்டேன்
வடிவேலனே சிவபாலனே
உன் பன்னிரெண்டு கரம்
உண்ணுகின்ற விதம்
கண்டேன் கனியொன்று கண்டேன்
அழகிய விழி வண்ணம்
ஆஆஆஆ ஓஓஒ
அழகிய விழி வண்ணம்
மழைநிகர் குழல் வண்ணம்
அழகிய விழி வண்ணம்
மழைநிகர் குழல் வண்ணம்
உனக்கெனவே பிறந்தாள்
அந்த மட அன்னம்
உனக்கெனவே பிறந்தாள்
அந்த மட அன்னம்
கண்டேன் கனியொன்று கண்டேன்
எந்த மான் தேடி வந்த மான்
மேயாத மான் புள்ளி மேவாத மான்
மேயாத மான்
பாயும் நடையழகும்
பின்னல் ஜடையழகும்
பாயும் நடையழகும்
பின்னல் ஜடையழகும்
கண் கவரும் முகமும்
இதழும் பொன் செங்கமலம்
எனவே திகழும் தனில்
அந்தம் மிகுந்திட வந்து
பிறந்தது மேயாத
மேயாத மேயாத மான்
மானைத் தேடி வந்த வேடா
அடடா மூடா சரி தான் போடா
உன் கள்ளத்தனம் என்னவென்று
கண்ணிரண்டும் காட்டுகையில்
எள்ளத்தனை கள்ளத்தனம்
என்னிடம் செல்லுமோடா அட
மானைத் தேடி வந்த வேடா
ஆவியே என் ஆருயிர்
சஞ்ஜீவியே மன்மதன் என்னும்
பாவியே மலர்க் கணைகள்
தூவியே வாட்டுறான் கண்ணே
ஆயல் ஓட்டும் பெண்ணே
பெண்ணே பெண்ணே
விக்கலும் வந்ததடி பெண்ணே
விக்கலும் வந்ததடி
சிக்கலில் நிற்கின்ற சுந்தரன் ஆனதால்
காதல் சிக்கலில் நிற்கின்ற சுந்தரன் ஆனதால்
விக்கலும் வந்ததடி பெண்ணே
விக்கலும் வந்ததடி
ஏய்ச்சுப் புட்டேனே
தாத்தா ஏய்ச்சுப் புட்டேனே
வள்ளி ஏய்ச்சுப் புட்டேனே
தாத்தா ஏய்ச்சுப் புட்டேனே
வள்ளியம்மை நாதனுக்கும்
புள்ளி மயில் வேலனுக்கும்
கண்ணனுக்கும்
பழனி மலை மன்னனுக்கும்
மங்களம் சுப மங்களம்
மங்களம் சுப மங்களம்