Vanna Malar Thannai Kandu

Vanna Malar Thannai Kandu Song Lyrics In English


ஹோஓ
ஹோ ஓ ஓ ஓ ஓபாலு

ஹோஓ
ஹோ ஓ ஓ ஓ ஓலீலா

வண்ண மலர் தன்னைக் கண்டு
இன்னிசைப் பண் பாடிக் கொண்டு
தன்னை மறந்தே பொன் வண்டு
என்ன சொல்லுது
வண்ண மலர் தன்னைக் கண்டு வண்டு

கன்னி உந்தன் கண்ணைக் கண்டு
தன் இனம் என்றே மருண்டு
தன் நிலை மறந்தே வண்டு
இசை பாடுதுஹேய்
கன்னி உந்தன் கண்ணைக் கண்டு வண்டு

கான வேடன் போலே வந்து
கண்ணி வைக்கப் பார்க்குறீர்
கான வேடன் போலே வந்து
கண்ணி வைக்கப் பார்க்குறீர்

மானென மருண்டோடும்
பெண் மானே
மானென மருண்டோடும்
பெண் மானே
உன்னை நான் விடேனே

மானிதுவும் அல்லவே பூ மானே
மயங்காதே வீணே
மானிதுவும் அல்லவே பூ மானே

கோவை இதழ் தன்னைக் கண்டு
ஆவல் மீறி வந்தே
கோவை இதழ் தன்னைக் கண்டு
ஆவல் மீறி வந்தே

கொத்தித் தின்னப் பித்தம்
கொண்டதேனோ கிளி போலவே
கொத்தித் தின்னப் பித்தம்
கொண்டதேனோ கிளி போலவே

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி எந்தன்
நெஞ்சினைக் கவர்ந்த இன்ப
வஞ்சியை மெய்க் காதல் தந்த
வண்ணக் கிளியே
கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் கிளியே


முழு மதியும் முகிலும்
போல் நாம் விளையாடுவோம்
முழு மதியும் முகிலும் போல்
நாம் விளையாடுவோம்

விழி மணியும் இமையும் போலே
உறவாடுவோம்
விழி மணியும் இமையும் போலே
உறவாடுவோம்

ஆருயிரேஏஏ

ஆரமுதேஏஏ

ஆரமுதெனவே காதல்
இன்பம் காணுவோம்
ஆரமுதெனவே காதல்
இன்பம் காணுவோம்

அன்பில் இணைந்தொன்றாய்
வாழுவோம்

இருவர் : நாமே அன்பில் இணைந்தொன்றாய்
வாழுவோம்

இருவர் : வண்ணமலர் தன்னைக் கண்டு
இன்னிசைப் பண் பாடிக் கொண்டு
தன்னை மறந்தே பொன் வண்டு
காதல் பேசுது
வண்ண மலர் தன்னைக் கண்டு வண்டு