Vantha Naal Muthal |
---|
விஷ்லிங் :
ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ
ஓஓ வந்த நாள் முதல்
இந்த நாள் வரை வந்த
நாள் முதல் இந்த நாள்
வரை வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும்
கடல் காற்றும் மலரும்
மண்ணும் கொடியும்
சோலையும் நதியும்
மாறவில்லை மனிதன்
மாறிவிட்டான்
ஓ ஓ ஓ ஹோ
ஆ ஓயே ஓ ஓ ஓ ஹோ
ஆ ஓயே
விஷ்லிங் :
நிலை மாறினால்
குணம் மாறுவான் பொய்
நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும்
கூறுவான் அது வேதன்
விதி என்றோதுவான்
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
ஓ ஓ ஓ ஹோ
ஆ ஓயே ஓ ஓ ஓ ஹோ
ஆ ஓயே
பறவையை கண்டான்
விமானம் படைத்தான்
பறவையை கண்டான்
விமானம் படைத்தான்
பாயும் மீன்களில்
படகினை கண்டான்
எதிரொலி கேட்டான்
வானொலி படைத்தான்
எதனை கண்டான்
பணம்தனை படைத்தான்
எதனை கண்டான் பணம்
தனை படைத்தான் மனிதன்
மாறிவிட்டான் மதத்தில்
ஏறிவிட்டான்
ஓ ஓ ஓ ஹோ
ஆ ஓயே ஓ ஓ ஓ ஹோ
ஆ ஓயே
விஷ்லிங் :
இன்பமும் காதலும்
இயற்கையின் நீதி ஏற்ற
தாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை
படைத்ததையெல்லாம்
பாவி மனிதன் பிரித்து
வைத்தானே மனிதன்
மாறிவிட்டான் மதத்தில்
ஏறிவிட்டான்
ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ
ஓஓ வந்த நாள் முதல்
இந்த நாள் வரை வானம்
மாறவில்லை
வான் மதியும் மீனும்
கடல் காற்றும் மலரும்
மண்ணும் கொடியும்
சோலையும் நதியும்
மாறவில்லை மனிதன்
மாறிவிட்டான்
ஓ ஓ ஓ ஹோ
ஆ ஓயே ஓ ஓ ஓ ஹோ
ஆ ஓயே ஓ ஓ ஹோ
ஆ ஓயே ஓஹோ ஓ
விஷ்லிங் :