Vanthaen Vandhanam |
---|
வந்தேன் வந்தனம்
உன் அரசுக்கு தந்தேன்
மதுராபுரி ராணியே
வந்தேன் வந்தனம்
உன் அரசுக்கு தந்தேன்
உத்தம தேச பக்தர் பலர்
நித்தம் தம் சித்தம் மகிழ்ந்து
நத்தி துதிக்கு வித்தக சீல பூமியாம்
முத்தமிழ் சேத்திர செந்தமிழ் நாடான
பாண்டிய நாட்டு அரசியே
அறுபதாயிரம் பாண்டியர்களின்
அருந்தவப் புதல்வியே
ஏழு வயதிலே எதிர்த்து வந்த
நீர் முகனை ஜெயித்து
மகுடாபிஷேகம் கொண்ட மகா ராணியே
அல்லிக் கொடியிலே அவதரித்து
ஆண் வாடையே கூடாதென்று
பொம்மை விருது கட்டி ஆண்ட பூங்கொடியே
வணக்கம் அல்லி ராணியே வணக்கம் (வசனம்)
எத்தனை நேரமாக இப்படி நிற்பேன்
கால்கள் இத்தித்தி நோகுதம்மா
எத்தனை எத்தனை
எத்தனை நேரமாக இப்படி நிற்பேன்
கால்கள் இத்தித்தி நோகுதம்மா
சத்தியமாக இனி
சகிக்க என்னாலாகாது
சத்தியமாக இனி சகிக்க என்னாலாகாது
தரணியாளும் அரசியே வர்மமேனோ தகாது
எத்தனை நேரமாக இப்படி நிற்பேன்
கால்கள் இத்தித்தி நோகுதம்மா
ஆ கால்கள் நோகுதம்மா
கொஞ்சம் கருணை செய்யம்மா
கால்கள் நோகுதம்மா
கொஞ்சம் கருணை செய்யம்மா
காவலாய் உலகாளும் ராணியே கோபம் அகுமா
கால்கள் நோகுதம்மா
கொஞ்சம் கருணை செய்யம்மா
தங்கையே சௌக்கியம் தானே
வேண்டுவார் குறை தீர்க்கும்
உலகாண்ட பெருமானே வருக வருக
துவாரகையை விட்டு அடியாளை தேடி வந்த
விஷயம் யாதோ
அண்ணியார் ருக்மணி தேவி சௌக்கியம்தானே (வசனம்)
எல்லாம் சுகமே
உன் கணவன் கால் கடுக்க அங்கு
நின்றுகொண்டிருக்கும் காரணம் என்னவோ (வசனம்)
தங்கையே அருமை தங்கையே
உன் மணவாளன் இப்படி ஏங்கி நிக்கிறார்
நீ அதைச் சொல்ல வேணுமிப்படி
தங்கையே அருமை தங்கையே
அதை ஏன் கேட்கிறீர்கள்
மனைவியின் மீது அன்பில்லாவிட்டாலும்
மகன் மீதாவது இருக்க வேண்டாமா
இதை போய் நான் உங்களிடம் சொல்லுகிறேனே
உங்களுக்கென்ன பிள்ளையா குட்டியா (வசனம்)
வாக்கு தவறி நடப்பவனை
கண்டிக்க வேண்டியதுதான்
ஏன் சிந்திக்க வேண்டியதும் கூட (வசனம்)
அர்ச்சுனா இது உனக்கு தகுதியா
அல்லி நிலை அறியாத மட மதியா
அர்ச்சுனா இது உனக்கு தகுதியா
அல்லி நிலை அறியாத மட மதியா
உரைத்ததை மறுக்கிலே உணமை இதுவே
உரைத்ததை மறுக்கிலே உணமை இதுவே
உளராதீர் தெரியும் உமது செயலால்
உமது மனைவியும் நான் என்பதா
கால்களும் நோகுது கருணை செய்வாய்
கருத்து மயங்கும் உரைத்தேன் உண்மையாய்
இனி மேல் இப்படி பிழைகள் செய்யாதே
ஒரு போதும் பிழை செய்யேன் நான் அருளே
உரிய இவளிடத்தில் உரை செய்வீரே
போதும் போதும் இனி கோபம் விடு
உன் புருஷனானதால் அழைத்திடு அன்பொடு
ஏன் அண்ணா நீர் என்னை ஏய்த்திட வந்தீரோ
இனி நான் உரையேன் உன் பாடவள் பாடு
எனக்கொன்றும் தெரியாது நான் போறேன்
உன்னையல்லால் எனக்கு துணை செய்வதார்
உதறினும் காலை விட மாட்டேன் பார்
என்னம்மா சங்கடமாயிருக்கு
எல்லாரிடமும் நல்லா இருப்பேல்
எனதிடம் உமது வஞ்சகங்கள் விழும்
இனி என்ன நான் செய்வேன் அர்ச்சுனனே
எமது கைகளை விடு மைத்துனனே
இனி என்ன நான் செய்வேன் அர்ச்சுனனே
எமது கைகளை விடு மைத்துனனே