Varrale

Varrale Song Lyrics In English




வராளே வராளே
ஜில் ஜில் ஜில் சிங்காரி
வராளே வராளே
ஜில் ஜில் ஜில் சிங்காரி
ரத்தத்தில் சூடு வச்சாளே

வரானே வரானே
ராஜாத்தி ராஜனே
முத்தத்தில் முத்தெடுப்பானே

தேன்னிலவு போல
தொலைஞ்சிட்ட நீதான்

பல்பு போட்ட சிரிப்பில்
பத்திக்கிட்ட நீதான்

கோந்துப்போட்டு நாம
ஒட்டிக்கவேணும்

கொஞ்சம் நேரம் பிரிஞ்சா
மனசு நோகும்

சூரியனே வேண்டாம்
அத வித்துப்புட்டு வாங்க
ராத்திரியில் மட்டும்
இனி வச்சிக்கலாம் தூங்க

பவுடர் போட்ட கன்னம்
அது பளபளக்கும் கின்னம்
என் எச்சில் ஈரம் பட்டா
அது இன்னும் கொஞ்சம் மின்னும்

வராளே வராளே
ஜில் ஜில் ஜில் சிங்காரி
வராளே வராளே
ஜில் ஜில் ஜில் சிங்காரி
ரத்தத்தில் சூடு வச்சாளே

வரானே வரானே
ராஜாத்தி ராஜனே
முத்தத்தில் முத்தெடுப்பானே



காதலென்ற வார்த்தை
அதுதான் மந்திரம்
மத்ததெல்லாம் இங்கே
சும்மா தந்திரம்

ரெண்டுப்பேரு இல்ல
இனி ஒன்னாகனும்
ஒன்னு ஆனப்பின்னே
அது மூனாகனும்


நெஞ்சமே காகிதம்
நீ அதில் ஓவியம்
வரைஞ்சு வச்சி
நான் வாழ்ந்தால்தான் காவியம்

மனசில் அன்பிருந்தா
அது போதும்
வானில் மேகமெல்லாம் கலராகும்

வாழும் இந்த வாழ்க்கை
ஒரு வானவில்ல போல இருக்கும்
கொஞ்சம் காலத்துல
நல்லபடி வாழவேனும்

வராளே வராளே
ஜில் ஜில் ஜில் சிங்காரி
வராளே வராளே
ஜில் ஜில் ஜில் சிங்காரி
ரத்தத்தில் சூடு வச்சாளே

வரானே வரானே
ராஜாத்தி ராஜனே
முத்தத்தில் முத்தெடுப்பானே



ஒத்த விரல் நீட்டு
அதுவே போதுமே
தொட்டுக்கிட்டே வாழுவேன்
நான் என்னாலுமே

உறங்கும் வரை நீ
என் மனசில் இருக்கனும்
கண்ணமூடினாலும்
நீ கனவில் தெரியனும்

சங்க இலக்கியம்
என்ன நீ படிக்கனும்
வேறொரு பொண்ண நீ
நினைக்க மறுக்கனும்

வானில் ஒரே ஒரு வெண்ணிலாதான்
வாழ்வில் ஒரே ஒரு பெண் நிலாதான்
பூக்கள் நூறு தேட
நான் பட்டாம்பூச்சியில்ல
மாரி மாரி ஜோடி சேர
நானும் மிருகம் இல்லையடி

வராளே வராளே
ஜில் ஜில் ஜில் சிங்காரி
வராளே வராளே
ஜில் ஜில் ஜில் சிங்காரி
ரத்தத்தில் சூடு வச்சாளே
ஹேய் ஏய் ஏய் ஏய்

வரானே வரானே
ராஜாத்தி ராஜனே
முத்தத்தில் முத்தெடுப்பானே
முத்தத்தில் முத்தெடுப்பானே
முத்தத்தில் முத்தெடுப்பானே