Varuthu Varuthu Ilam Kaatru |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு
சிறகு முளைத்த கிளி போலே
மனம் பறக்க நினைக்கும் புவி மேலே
தனிமை நினைவு இனி ஏது
ஒரு தலைவன் தழுவ வரும்போது
வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு
நாடியெங்கும் ஓடிச்சென்று
நாளும் ஒரு சூடேற்றும் ரூபமே
நேசம் என்னும் நெய்யை விட்டு
நெஞ்சில் நிதம் நான் ஏற்றும் தீபமே
தோளில் உனை தாங்குவேன்
இதழ் தேனைதினம் வாங்குவேன்
கேளு பரிமாறுவேன்
அதில் நானும் பசியாறுவேன்
பாலும் தேனும்
தீர தீர ஊறுமா
வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு
ஊரைச் சுற்றும் தேரும் இன்று
சேரும் இடம் சேராமல் வாடுதே
தேவன் வந்தான்தேரைக்கண்டு
சோகம் இனி சொல்லாமல் ஓடுமே
நாளை சுப வேளைதான்
அதில் கூடும் மணமாலை தான்
நாளும் புது லீலைதான்
இனி ஏது இடைவேளை தான்
ஆடல் பாடல்
ஆவல் தீர காணலாம்
வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு
சிறகு முளைத்த கிளி போலே
மனம் பறக்க நினைக்கும் புவி மேலே
தனிமை நினைவு இனி ஏது
ஒரு தலைவன் தழுவ வரும்போது
வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு