Vasantha Kala Thendralil |
---|
வசந்த காலத் தென்றலில் ஒரு வண்டு
வசந்த காலத் தென்றலில் ஒரு வண்டு
அது மலர்ந்து சிரிக்கும் தாமரை மலர்கண்டு
காதல் கீதம் பாடிக் கொண்டு
மயங்கி இருந்தது மலர் தேனை உண்டு
ஆசை அறுபது நாள்மோகம் முப்பது நாள்
இளங்காற்றில் தவழ்ந்தோடி
வரும் செந்தாழை வாசம்
இளங்காற்றில் தவழ்ந்தோடி
வரும் செந்தாழை வாசம்
வரும் செந்தாழை வாசம்
கருவண்டின் மனதையெல்லாம்
கொஞ்சம் கொஞ்சம் மாற்றவே
நேசம் எல்லாம் மறந்தது வண்டு
பறந்து தாவித் தாவி ஓடிச் சென்றது
வண்டின் நேசம் வெளி வேஷம்
எனக் கண்டேன் கண்டேன் கண்டேனே
எந்தன் கண்ணாலே
ஆசை அறுபது நாள்மோகம் முப்பது நாள்
ஆசை அறுபது நாள்மோகம் முப்பது நாள்
தாழம்பூவின் அழகிலே மதி தடுமாறி
ஆசையிலே அருகில் சென்றது
தழுவி காதலுடன் மேனி முத்தம் தானே தந்தது
பூ நாகம் சீறியே பொன் வண்டைத் தீண்டவே
பூ நாகம் சீறியே பொன் வண்டைத் தீண்டவே
ஆவியதை இழந்தது வண்டு
அந்தோ பாவம் பாவம் ஆடி வீழ்ந்தது
வண்டின் நேசம் மதி மதி மோசம்
எனக் கண்டேன் கண்டேன் கண்டேனே
எந்தன் கண்ணாலே
வசந்த காலத் தென்றலில் ஒரு வண்டு
அது மலர்ந்து சிரிக்கும் தாமரை மலர்கண்டு
காதல் கீதம் பாடிக் கொண்டு
மயங்கி இருந்தது மலர் தேனை உண்டு அந்த வண்டு