Vasantha Kala Thendralil

Vasantha Kala Thendralil Song Lyrics In English


வசந்த காலத் தென்றலில் ஒரு வண்டு
வசந்த காலத் தென்றலில் ஒரு வண்டு
அது மலர்ந்து சிரிக்கும் தாமரை மலர்கண்டு
காதல் கீதம் பாடிக் கொண்டு
மயங்கி இருந்தது மலர் தேனை உண்டு
ஆசை அறுபது நாள்மோகம் முப்பது நாள்

இளங்காற்றில் தவழ்ந்தோடி
வரும் செந்தாழை வாசம்
இளங்காற்றில் தவழ்ந்தோடி
வரும் செந்தாழை வாசம்
வரும் செந்தாழை வாசம்
கருவண்டின் மனதையெல்லாம்
கொஞ்சம் கொஞ்சம் மாற்றவே
நேசம் எல்லாம் மறந்தது வண்டு

பறந்து தாவித் தாவி ஓடிச் சென்றது
வண்டின் நேசம் வெளி வேஷம்
எனக் கண்டேன் கண்டேன் கண்டேனே
எந்தன் கண்ணாலே

ஆசை அறுபது நாள்மோகம் முப்பது நாள்
ஆசை அறுபது நாள்மோகம் முப்பது நாள்

தாழம்பூவின் அழகிலே மதி தடுமாறி
ஆசையிலே அருகில் சென்றது
தழுவி காதலுடன் மேனி முத்தம் தானே தந்தது


பூ நாகம் சீறியே பொன் வண்டைத் தீண்டவே
பூ நாகம் சீறியே பொன் வண்டைத் தீண்டவே

ஆவியதை இழந்தது வண்டு
அந்தோ பாவம் பாவம் ஆடி வீழ்ந்தது
வண்டின் நேசம் மதி மதி மோசம்
எனக் கண்டேன் கண்டேன் கண்டேனே
எந்தன் கண்ணாலே

வசந்த காலத் தென்றலில் ஒரு வண்டு
அது மலர்ந்து சிரிக்கும் தாமரை மலர்கண்டு
காதல் கீதம் பாடிக் கொண்டு
மயங்கி இருந்தது மலர் தேனை உண்டு அந்த வண்டு