Vazhi Nedugilum |
---|
வழி நெடுகிலும் மரங்கள்
மரம் முழுவதும் பூக்கள்
பூ முழுவதும் விதைகள்
விதை முளைத்திடும் பூமி
உன்னை அழைக்குது வா வா
உயிர் அழைக்குது வா
உன்னை அழைக்குது வா வாஆஅ
வாழ்க்கை முழுவதும்
அனுபவம்
வாழ்ந்து பாருங்கள் சுகம் தரும்
ஒவ்வொரு மனிதனும் உயர்ந்தவன்
ஒவ்வொரு மனதிலும் ஒரு ரணம்
எத்தனை பேரின் மூச்சுக்குள்
எத்தனை பேரின் சுவாசங்கள்
கடல்கள் கரைகள் மலைகளை
கடந்திடும் உங்கள் மூச்சுக்கள்
ஹேஏ ஆ எஹீ ஏ
எத்தனை பேரின் வேண்டுதல்
உன் இத்தனை சிறிய வாழ்க்ககைக்கு
வாழ்க்கை முழுவதும் அனுபவம்
வாழ்ந்து பாருங்கள் சுகம் தரும்
யார் விதைத்திட்ட நெல் மணி
உன் பசி தீர்த்தது தெரியுமாஆஅ
பணம் தேடிடும் உலகினில்
அந்த கடன் தீர்த்திட முடியுமாஆஅ
வண்ணத்து பூச்சியின் சிறகினை
வரைந்தவன் சொல்லும் ரகசியம்
வாழ்ந்திடும் மனிதனின் முடிவினை
ஒளித்து வைத்ததின் அதிசயம்
ஊஊஓஓஊஊ
யய் யய் யே
ஊஓஓஊ
யய் யய் யே யய் யே
ஊஓஓஊ
இரு உயிர்களின் கலக்கத்தை
உன் ஒரு உயிரென்று உணருதே
இரவில் தாயின் கண்களில்
தேடிடும் கேள்விக்கு விடை என்ன
ஹேஏ ஆ எஹீ ஏ
உணர்வுக்கு மொழியில்லை
உணர்வதில் பிழை இல்லை
மறுபடி பிறப்பதற்கு
மண் மீது இடமில்லை
வாழ்க்கை முழுவதும் அனுபவம்
வாழ்ந்து பாருங்கள் சுகம் தரும்
ஒவ்வொரு மனிதனும் உயர்ந்தவன்