Vedham Nee Iniya Naadham Nee |
---|
வேதம் நீ இனிய நாதம் நீ
வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ இனிய நாதம் நீ
கருணை மேவும் பூவிழிப் பார்வையில்
கவிதை இன்பம் காட்டுகிறாய்
கருணை மேவும் பூவிழிப் பார்வையில்
கவிதை இன்பம் காட்டுகிறாய்
இளைய தென்றல் காற்றினிலே
ஏஏஏஏஏஏ
இளைய தென்றல் காற்றினிலே
இனிய சந்தப் பாட்டினிலே
இளைய தென்றல் காற்றினிலே
இனிய சந்தப் பாட்டினிலே
எதிலும் உந்தன் நாதங்களே
நினைத்த பொருள் தரும் நிரந்தர சுகம் தரும்
வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ இனிய நாதம் நீ
அண்டம் பகிரண்டம்
உனை அண்டும் படி வந்தாய்
அண்டம் பகிரண்டம்
உனை அண்டும் படி வந்தாய்
தண்டை ஒலி ஜதி தருமோ
கமல பாதம் சதிரிடுமோ
தண்டை ஒலி ஜதி தருமோ
கமல பாதம் சதிரிடுமோ
மனமும் விழியும் தினமும்
எழுதும் அழகே
மலையும் கடலும் நதியும் அடியுன் வடிவே
நெஞ்சம் இது தஞ்சம் என
உனைத்தினம் நினைத்தது
நித்தம் ஒரு புத்தம் புது
இசைத்தமிழ் வடித்தது
ஒருமுறை தரிசனமும் தருக
இசையில் உனது இதயம் இசையும்
மனம் குணம் அறிந்தவள்
குழலது சரியுது சரியுது
குறுநகை விரியுது விரியுது
விழிக்கருணை மழை
அதில் நனைய வரும் ஒரு மனம் பரவும்
வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ இனிய நாதம் நீ