Veenai Enadhu Kuzhanthai |
---|
ஆஆஆஆஆ
அஆஆஆஆஅஆ
வீணை எனது குழந்தை
வீணை எனது குழந்தை
அதில் மீட்டும் சுரங்கள் மழலை
வீணை எனது குழந்தை
மடி மீது நான் வைத்து தாலாட்டுவேன்
மடி மீது நான் வைத்து தாலாட்டுவேன்
அதில் மகரந்த ராகங்கள் நான் மீட்டுவேன்
வீணைவீணை
வீணை எனது குழந்தை
அடடா எனக்கொரு சிறகொன்று முளைக்கின்றதே
விரல்கள் அசைத்தாலே சுரங்களின் ஊர்கோலம்
விழித்தே இருந்தாலும் கனவுகள் ஏராளம்
மனதுக்குள் மழை விழும் அனுபவமோஓஓஓஓ
வான் மீது போகின்ற மேகங்களே
இசை கேட்க எனைத் தேடி வாருங்களேன்
என் வீணைபொன் வீணை
உறங்காமல் கண் மூடி ஸ்ருதி சேர்க்கின்றேன்
உயிரெனும் தீபத்தில் நெய் வார்க்கின்றேன்
வீணைவீணை
வீணை எனது குழந்தை
வாழ்வே கனவினில் வரைகின்ற நீர்க்கோலமேஏ
இருக்கும் வரையிங்கே இசையொரு சந்தோஷம்
நிலமே மறைந்தாலும் நிலைப்பது சங்கீதம்
ஸ்வரங்களே வரங்களாய் திரிகின்றதேஏ
விழியோரம் துளியொன்று திரள்கின்றதே
என் வீணைதனில் வந்து விழுகின்றதே
இது போதும்இசை போடும்
செவி எங்கும் அமுதாக நான் பாய்கின்றேன்
புவியெங்கும் இசையாக நான் கேட்கின்றேன்
வீணை எனது குழந்தை
அதில் மீட்டும் சுரங்கள் மழலை
வீணை எனது குழந்தை
மடி மீது நான் வைத்து தாலாட்டுவேன்
மடி மீது நான் வைத்து தாலாட்டுவேன்
அதில் மகரந்த ராகங்கள் நான் மீட்டுவேன்
வீணைவீணை
வீணை எனது குழந்தை