Veenai Meettum Kaigale |
---|
வீணை மீட்டும் கைகளே
மாலை சூட்டவா ஆஅஆ
மாலை சூட்டும் கைகளே
வீணை மீட்ட வா ஆஅஆ
வீணை மீட்டும் கைகளே
உலகமே புகழ்ந்ததே
அது உண்மை அல்லவா
வீணை மீட்டும் கைகளே
கண்ணனோடு ராதை என்றார்
ராமனோடு சீதை என்றார்
அருகு போல வேர்கள் கண்டோம்
மூங்கில் போல சொந்தம் கொண்டோம்
எனை உனக்கென
ஈசன் வைத்தான்
இலை மறைவினில் பாசம் வைத்தான்
நமது வீட்டு ராகம்
உலகம் எங்கும் பாட்டு
வீணை மீட்டும் கைகளே
மாலை சூட்டவா ஆஅஆ
மாலை சூட்டும் கைகளே
வீணை மீட்ட வா ஆஅஆ
வீணை மீட்டும் கைகளே
ஆறு ஒன்று ஓடும்போது
கங்கை போல ஓட வேண்டும்
நூறு நூறு ஆண்டு வாழ்ந்தால்
நம்மை போல வாழ வேண்டும்
இது இறைவனின்
காதல் கட்டில்
ரதி மன்மதன் ஆடும் தொட்டில்
தலைவனே உன் ஆணை
தலைவி என்னும் வீணை
வீணை மீட்டும் கைகளே
மாலை சூட்டவா ஆஅஆ
மாலை சூட்டும் கைகளே
வீணை மீட்ட வா ஆஅஆ
வீணை மீட்டும் கைகளே