Vela Vela Ellorukkum

Vela Vela Ellorukkum Song Lyrics In English


வேலையைத்
தேடி அலைந்தலைந்து
நாளெல்லாம் களைத்து அலுத்து
வேட்டி விலகியது கூடத் தெரியாமல்
தூங்கும் வாலிப இளைஞர்களே

இத்தனை நாட்கள்
புலர்ந்தது போலே
இன்றைய பொழுதும் விடிந்தது
சீக்கிரம் எழுவீர் எல்லோரும் சேர்ந்தே
வெளிச்சத்தில் வேலையைத் தேடுவோம்

வேல வேல
எல்லோர்க்கும் உண்டு
வேலை இன்றி யாரும் இல்லே

காலை மாலை
வந்து போகும் ஆனாலும்
வேலை வந்து வந்து போவதில்லை
கால காலமாக இங்கு
எல்லா உயிர்க்கும்
வேலை உண்டு வேலை உண்டு
ஞாலம் என்னும் சோலை
தன்னில் வந்து பாரு

ஹே வேல வேல
எல்லோர்க்கும் உண்டு
வேலை இன்றி யாரும் இல்லே

படிக்கும் போது பாடம் கூட
அதுவும் வேலை தான்
வெளியில் வந்து அலைந்து தேடும்
அதுவும் வேலைதான்

படிக்கும் போது பாடம் கூட
அதுவும் வேலைதான்
வெளியில் வந்து அலைந்து தேடும்
அதுவும் வேலைதான்

பெண்ணைத் தேடு
அதுவும் வேலை
காதலித்தால்
அதுவும் வேலை
தாலி கட்டு
அதுவும் வேலை
குழந்தை பெற்றால்
அதுவும் வேலை

பெண்ணைத் தேடு
அதுவும் வேலை
காதலித்தால்
அதுவும் வேலை
தாலி கட்டு
அதுவும் வேலை
குழந்தை பெற்றால்
அதுவும் வேலை

சும்மா உக்கார்ந்து
சோம்பேறியாய் இருந்த போதும்
முன்னாலும் பின்னாலும்
மூக்காலே மூச்சிழுக்க வேணும்
அதுவும் வேலை இதுவும் வேலை
எதுவும் வேலை

ஹே வேல வேல
எல்லோர்க்கும் உண்டு
வேலை இன்றி யாரும் இல்லே


காலை மாலை
வந்து போகும் ஆனாலும்
வேலை வந்து வந்து போவதில்லை
கால காலமாக இங்கு
எல்லா உயிர்க்கும்
வேலை உண்டு வேலை உண்டு
ஞாலம் என்னும் சோலை
தன்னில் வந்து பாரு

ஹே வேல வேல
எல்லோர்க்கும் உண்டு
வேலை இன்றி யாரும் இல்லே

காரைத் துடைக்கும் கிளீனர்
அந்த மேலை நாட்டிலே
எவ்வளவோ டாலர்
உள்ள மல்டி மில்லியனர்

காரைத் துடைக்கும் கிளீனர்
அந்த மேலை நாட்டிலே
எவ்வளவோ டாலர்
உள்ள மல்டி மில்லியனர்

பணம் இருக்கும்
ஒருவன் இங்கு
ஆடும் ஆட்டம்
என்னவென்று
அனைவருக்கும்
தெரியும் தெரியும்
அதுவும் என்ன
வேலை வேலை

பணம் இருக்கும்
ஒருவன் இங்கு
ஆடும் ஆட்டம்
என்னவென்று
அனைவருக்கும்
தெரியும் தெரியும்
அதுவும் என்ன
வேலை வேலை

உயர்வும் தாழ்வென்ன
எடுக்கின்ற கொள்கை
தன்னில் போடா
மேலும் கீழென்ன
செய்கின்ற வேலை தன்னில் போடா
அதுவும் வேலை இதுவும் வேலை
எதுவும் வேலை

ஹே வேல வேல
எல்லோர்க்கும் உண்டு
வேலை இன்றி யாரும் இல்லே

காலை மாலை
வந்து போகும் ஆனாலும்
வேலை வந்து வந்து போவதில்லை
கால காலமாக இங்கு
எல்லா உயிர்க்கும்
வேலை உண்டு வேலை உண்டு
ஞாலம் என்னும் சோலை
தன்னில் வந்து பாரு

ஹே வேல வேல
எல்லோர்க்கும் உண்டு
வேலை இன்றி யாரும் இல்லே