Vellai Manam

Vellai Manam Song Lyrics In English


வெள்ளை மனம் உள்ள மச்சான்
விழியோரம் ஈரம் என்ன
பக்கத்திலே நானிருந்தும்
துக்கத்திலே நீ இருந்தால்
கரைசேரும் காலம் எப்போ

வெள்ளை மனம் உள்ள மச்சான்
விழியோரம் ஈரம் என்ன

கள்ள மனம் முள்ளு தச்சி
கண்ணீரில் மூழ்குதடி
வெட்கத்திலே நான் அழுக
துக்கத்திலே நீ அழுத
கரை சேரும் காலம் எப்போ

கள்ள மனம் முள்ளு தச்சி
கண்ணீரில் மூழ்குதடி

செங்கரும்ப நான் மறந்து
வேலி முள்ளை ஏன் கடிச்சேன்

பூவுக்குள்ளும் நாகம் உண்டு
சாமிக்கும் தான் வீடு ரெண்டு

கள்ளையும் பாலா நீ நினைச்ச
முள்ளையும் பூவா நீ முடிச்ச

போனதெல்லாம் போகட்டும்ங்க
யாருமிங்கே ராமனில்லே

வெள்ளை மனம் உள்ள மச்சான்
விளையாடி ஓஞ்சி வந்தான்
பக்கத்திலே நீ இருந்தா
சொர்க்கத்திலே நான் மிதப்பேன்
எந்நாளும் சேர்ந்திருப்பேன்


வெள்ளை மனம் உள்ள மச்சான்
விளையாடி ஓஞ்சி வந்தான்

கூடுவிட்டு போனகிளி
ஜோடி கிட்டே சேர்ந்ததம்மா

ஜோடி வந்து சேர்ந்த கிளி
கோடி சுகம் காணுதம்மா

சிப்பிய போல நானிருந்து
சிந்திய தேனை சேர்த்து வச்சேன்

செங்குளத்தில் பையன் வந்தால்
இன்னும் கொஞ்சம் தொல்லையடி

வெள்ளை மனம் உள்ள மச்சான்
விளையாடி ஓஞ்சி வந்தான்
பக்கத்திலே நீ இருந்தா
சொர்க்கத்திலே நான் மிதப்பேன்
எந்நாளும் சேர்ந்திருப்பேன்

வெள்ளை மனம் உள்ள மச்சான்
விளையாடி ஓஞ்சி வந்தான்