Vellai Niranthoru |
---|
வெள்ளை நிறத்தொரு
பச்சக் கிளிப்பிள்ளையே
உள்ளம் தவிப்பதை
சொல்ல முடியலியே
முல்லைக் கொடிக்கொரு தேரும் இங்கிருக்க
முல்லைக் கொடி அதை அள்ளித் தேரில் விட
வள்ளலும் இங்கில்லையே
வெள்ளை நிறத்தொரு
பச்சக் கிளிப்பிள்ளையே
உள்ளம் தவிப்பதை
சொல்ல முடியலியே
கண்கள் ரெண்டும் இங்கு ஈரம்
கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை யாரும்
கண்கள் ரெண்டும் இங்கு ஈரம்
கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை யாரும்
உள்ளத்தின் ஆழத்தில் ஊறும் ஈரம்
அது உள்ளுக்குள் காய்ந்தே தான் போகும்
உள்ளத்தின் ஆழத்தில் ஊறும் ஈரம்
அது உள்ளுக்குள் காய்ந்தே தான் போகும்
வானத்து மேகத்தில்
தூங்கிடும் நீரது
பூமிக்கு வந்திடுமா
வானத்தை தேடிடும் ஆழக் கடலினில்
கொட்டிக் கலந்திடுமா
இல்லை சொல்லாமல் கொள்ளாமல்
மேகம் கலைந்திடுமா
வெள்ளை நிறத்தொரு
பச்சக் கிளிப்பிள்ளையே
உள்ளம் தவிப்பதை
சொல்ல முடியலியே
நேற்று நடந்தது
என்ன எண்ணி எண்ணி
பார்க்கத் துடிப்பதும் என்ன
நேற்று நடந்தது
என்ன எண்ணி எண்ணி
பார்க்கத் துடிப்பதும் என்ன
பூத்துக் குலுங்கிடும்
பூவை அள்ளிச் சூடி
சேர்த்துச் சிரித்ததும் என்ன
பூத்துக் குலுங்கிடும்
பூவை அள்ளிச் சூடி
சேர்த்துச் சிரித்ததும் என்ன
ஆற்றங்கரையினில் ஆடிக் களித்ததும்
நெஞ்சம் மறந்திடுமா
ஓடை கரை தன்னில் ஓடிப் பிடித்ததும்
உள்ளுக்குள் ஓடுதம்மா
இன்று சேர்ந்தே இரண்டும் தான்
விக்கித் தவிக்குதம்மா
வெள்ளை நிறத்தொரு
பச்சக் கிளிப்பிள்ளையே
உள்ளம் தவிப்பதை
சொல்ல முடியலியே
முல்லைக் கொடிக்கொரு தேரும் இங்கிருக்க
முல்லைக் கொடி அதை அள்ளித் தேரில் விட
வள்ளலும் இங்கில்லையே
வெள்ளை நிறத்தொரு
பச்சக் கிளிப்பிள்ளையே
உள்ளம் தவிப்பதை
சொல்ல முடியலியே