Vellai Pura Ondru (Sad Version)

Vellai Pura Ondru (Sad Version) Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ

வெள்ளைப் புறா ஒன்று
போனது கையில் வராமலே
வெள்ளைப் புறா ஒன்று
போனது கையில் வராமலே

முதல் எழுத்து தாய் மொழியில்
தலைஎழுத்து யார் மொழியில்
என் வாழ்க்கை வான் வெளியில்
ஓ ஓ ஓ

வெள்ளைப் புறா ஒன்று
போனது கையில் வராமலே

பாதச்சுவடு தேடி தேடி
கால்கள் ஓய்ந்து போனதே
நாளும் அழுது தீர்த்ததாலே
கண்கள் ஏழை ஆனதே

தலைவிதி எனும் வார்த்தை இன்று
கவலைக்கு மருந்தானதே
வேதங்களே வாழும் வரை
சோகங்களே காதல் கதை
கார்கால மலர்களும் என்னோடு தள்ளாடும்


வெள்ளைப் புறா ஒன்று
போனது கையில் வராமலே
முதல் எழுத்து தாய் மொழியில்
தலைஎழுத்து யார் மொழியில்
என் வாழ்க்கை வான் வெளியில்
ஓ ஓ ஓ

வெள்ளைப் புறா ஒன்று
போனது கையில் வராமலே

நீயும் நானும் சேர்ந்தபோது
கோடை கூட மார்கழி
பிரிந்த பின்பு பூவும் என்னை
சுடுவதென்ன காதலி

துடுப்பிழந்ததும் காதல் ஓடம்
திசை மறந்தது பைங்கிளி
போகும் வழி நூறானதே
கண்ணீரினால் சேறானதே
இல்லாத உறவுக்கு நான் செய்யும் அபிஷேகம்

வெள்ளைப் புறா ஒன்று
போனது கையில் வராமலே
முதல் எழுத்து தாய் மொழியில்
தலைஎழுத்து யார் மொழியில்
என் வாழ்க்கை வான் வெளியில்
ஓ ஓ ஓ

வெள்ளைப் புறா ஒன்று
போனது கையில் வராமலே