Vellaik Kamalathile Aval |
---|
வெள்ளைக் கமலத்திலே
அவள் வீற்றிருப்பாள் புகழேற்றிருப்பாள்
வெள்ளைக் கமலத்திலே
அவள் வீற்றிருப்பாள் புகழேற்றிருப்பாள்
கொள்ளைக் கனியிசைதான்
நன்கு கொட்டுதல் யாழினைக் கொண்டிருப்பாள்
கொள்ளைக் கனியிசைதான்
நன்கு கொட்டுதல் யாழினைக் கொண்டிருப்பாள்
வெள்ளைக் கமலத்திலே (2)
கள்ளக் கடலமுதை நிகர்
கண்டதோர் பூந்தமிழ் கவி சொல்லவே
கள்ளக் கடலமுதை நிகர்
கண்டதோர் பூந்தமிழ் கவி சொல்லவே
பிள்ளைப் பருவத்திலே
எனைப் பேண வந்தாளருள் பூண வந்தாள்
பிள்ளைப் பருவத்திலே
எனைப் பேண வந்தாளருள் பூண வந்தாள்
வெள்ளைக் கமலத்திலே (2)
சொற்பரு நயமறியாக
இசை தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறிவார்
சொற்பரு நயமறியாக
இசை தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறிவார்
விற்பனத் தமிழ்ப் புலவோர்
அந்த மேலவர் நாவெனப் மலர்ப்பதத்தாள்
விற்பனத் தமிழ்ப் புலவோர்
அந்த மேலவர் நாவெனப் மலர்ப்பதத்தாள்
வெள்ளைக் கமலத்திலே (2)
வாணியைச் சரண் புகுந்தேன்
அருள் வாக்களிப்பாள் எனத் திடமிருந்தேன்
வாணியைச் சரண் புகுந்தேன்
அருள் வாக்களிப்பாள் எனத் திடமிருந்தேன்
பேணிய பெருந்தவத்தாள் நிலம்
பெயரளவும் பெயர் பெயராதாள்
பேணிய பெருந்தவத்தாள் நிலம்
பெயரளவும் பெயர் பெயராதாள்
வெள்ளைக் கமலத்திலே
அவள் வீற்றிருப்பாள் புகழேற்றிருப்பாள்
கொள்ளைக் கனியிசைதான்
நன்கு கொட்டுதல் யாழினைக் கொண்டிருப்பாள்
வெள்ளைக் கமலத்திலே (2)