Vellam Pole Thullum |
---|
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன்
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன்
சின்ன வயதினிலே பொங்கும் நினைவுகளே
வெறும் கனவுகள் கற்பனைகள்
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
ஆஆஆஆஆ
நாணன நாணன நாணன நாணன நானா
கள்ளம் இல்லா உண்மைக் காதலென்றால்
ஆஆஆஆஆ
ஹாஆஅஆஅஆஆஅ
கள்ளம் இல்லா உண்மைக் காதலென்றால்
கண்களில் ஆரம்பமா
கண்கொள்ளாக் காட்சியில் ஆரம்பமா
வெள்ளமும் வெள்ளமும் சேர்வதுபோல்
உள்ளம் பிணைந்திடுமா
அன்பினால் ஒன்று கலந்திடுமா
பெண் மனதிலே வீண் சலனமா
பொன் ஒளியிலே கண் திறக்குமா
நல் வாழ்வு மலர்ந்திடுமாஹா
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன்
சின்ன வயதினிலே பொங்கும் நினைவுகளே
வெறும் கனவுகள் கற்பனைகள்
நனானனானா நனானனானா
நானனா நானனா னா
நானனா நானனா நானனா ணா
காலை இளம் வெய்யில் தீண்டும் முன்னே
ஆஆஆஆஆ
ஹாஆஅஆஅஆஆஅ
காலை இளம் வெய்யில் தீண்டும் முன்னே
சோலை மலர்ந்ததம்மா
வண்டுக்கோர் ஓலை வரைந்ததம்மா
வேளை தெரியாமல் காளை மனம்
வேடிக்கை பார்க்குதம்மா
நெஞ்சத்தில் வேதனை சேர்க்குதம்மா
துணை கிடைக்குமா சுகம் பிறக்குமா
அன்பு நிலைக்குமா எண்ணம் பலிக்குமா
மன ஏக்கம் தணிந்திடுமா ஹா
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன்
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன்
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே