Vellam Pole Thullum

Vellam Pole Thullum Song Lyrics In English


வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன்
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன்
சின்ன வயதினிலே பொங்கும் நினைவுகளே
வெறும் கனவுகள் கற்பனைகள்

வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே

ஆஆஆஆஆ
நாணன நாணன நாணன நாணன நானா

கள்ளம் இல்லா உண்மைக் காதலென்றால்

ஆஆஆஆஆ
ஹாஆஅஆஅஆஆஅ

கள்ளம் இல்லா உண்மைக் காதலென்றால்
கண்களில் ஆரம்பமா
கண்கொள்ளாக் காட்சியில் ஆரம்பமா
வெள்ளமும் வெள்ளமும் சேர்வதுபோல்
உள்ளம் பிணைந்திடுமா
அன்பினால் ஒன்று கலந்திடுமா
பெண் மனதிலே வீண் சலனமா
பொன் ஒளியிலே கண் திறக்குமா
நல் வாழ்வு மலர்ந்திடுமாஹா

வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன்
சின்ன வயதினிலே பொங்கும் நினைவுகளே
வெறும் கனவுகள் கற்பனைகள்


நனானனானா நனானனானா
நானனா நானனா னா
நானனா நானனா நானனா ணா

காலை இளம் வெய்யில் தீண்டும் முன்னே

ஆஆஆஆஆ
ஹாஆஅஆஅஆஆஅ

காலை இளம் வெய்யில் தீண்டும் முன்னே
சோலை மலர்ந்ததம்மா
வண்டுக்கோர் ஓலை வரைந்ததம்மா
வேளை தெரியாமல் காளை மனம்
வேடிக்கை பார்க்குதம்மா
நெஞ்சத்தில் வேதனை சேர்க்குதம்மா
துணை கிடைக்குமா சுகம் பிறக்குமா
அன்பு நிலைக்குமா எண்ணம் பலிக்குமா
மன ஏக்கம் தணிந்திடுமா ஹா

வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன்
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன்

வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே