Ven Palingu Medai |
---|
வெண்பளிங்கு மேடை கட்டி
வண்டிரண்டை ஆடவிட்டு
கண்கள் என்று சொல்லலாகுமோ அன்பே
சன்னதியில் வரலாகுமோ
வெண்பளிங்கு மேடை கட்டி
வண்டிரண்டை ஆடவிட்டு
கண்கள் என்று சொல்லலாகுமோ அன்பே
சன்னதியில் வரலாகுமோ
தென்பாங்கு ராகம் தொட்டு
செந்தமிழில் பாட்டெடுத்து
தென்பாங்கு ராகம் தொட்டு
செந்தமிழில் பாட்டெடுத்து
கன்னி என்னை வெல்லலாகுமோ அன்பே
சன்னதியில் வரலாகுமோ
தென்பாங்கு ராகம் தொட்டு
செந்தமிழில் பாட்டெடுத்து
கன்னி என்னை வெல்லலாகுமோ அன்பே
சன்னதியில் வரலாகுமோ
மின்னல் வரும் மேகத்திலே
உன் கூந்தல் போனதென்று
மின்னல் வரும் மேகத்திலே
உன் கூந்தல் போனதென்று
மெல்லிடையை தூதுவிட்டு
தள்ளாடி வந்தாயோ
தங்கரதம் ஏறிவந்து
மங்கை முகம் பார்த்தவரே
தங்கரதம் ஏறிவந்து
மங்கை முகம் பார்த்தவரே
பொங்கி வரும் ஆசையிலே
பங்கு பெறக் கூடாதோ
தென்பாங்கு ராகம் தொட்டு
செந்தமிழில் பாட்டெடுத்து
கன்னி என்னை வெல்லலாகுமோ அன்பே
சன்னதியில் வரலாகுமோ
அன்புக்கனி சாறு எடுத்து
அந்தி வெய்யில் சூடேற்றி
அன்புக்கனி சாறு எடுத்து
அந்தி வெய்யில் சூடேற்றி
இன்பம் என்று நீ கொடுத்தால்
என் மயக்கம் தீராதோ
உள்ளம் என்ற ஊஞ்சலிலே
பள்ளி கொண்ட ஆருயிரே
உள்ளம் என்ற ஊஞ்சலிலே
பள்ளி கொண்ட ஆருயிரே
மெல்ல மெல்ல நான் தொடவா
அல்லி மலர் தேன் தரவா
வெண்பளிங்கு மேடை கட்டி
வண்டிரண்டை ஆடவிட்டு
கண்கள் என்று சொல்லலாகுமோ அன்பே
சன்னதியில் வரலாகுமோ